சென்னை: சென்னை காமராஜர் சாலையில் உழைப்பாளர் சிலை அருகில் கடைசி கட்ட குடியரசு தின விழா அணிவகுப்பு ஒத்திகை இன்று (ஜன.24) காலை நடைபெற்றது.
நாடு முழுவதும் குடியரசு தினவிழா வரும் ஜன.26-ம் தேதி கொண்டாடப்படுகிறது. தமிழகத்தில், சென்னையில் நடைபெறும் குடியரசு தின விழாவில் ஆளுநர் பங்கேற்று தேசிய கொடியை ஏற்றிவைத்து, முப்படைகளின் அணிவகுப்பை ஏற்பார். இந்த நிகழ்ச்சியானது ஆண்டுதோறும் மெரினா கடற்கரையில் காந்தி சிலை முன்பாக நடைபெறும்.
ஆனால், தற்போது அங்கு மெட்ரோ ரயில் பணிகள் நடைபெறுவதால், இந்தாண்டு குடியரசு தினவிழா கொண்டாட்டம் வரும் 26-ம் தேதி காமராஜர் சாலையில் உழைப்பாளர் சிலை அருகில் கொண்டாடப்பட உள்ளது. இதற்கான கடைசி கட்ட குடியரசு தின விழா அணிவகுப்பு ஒத்திகை இன்று (ஜன.24) காமராஜர் சாலையில் உழைப்பாளர் சிலை அருகில் நடைபெற்றது.
இதில் முப்படை, தேசிய மாணவர் படை, காவல்துறை அணிவகுப்பு ஒத்திகை நடைபெற்றது. மேலும், 2 ஆண்டுகளுக்கு பிறகு குடியரசு தின விழாவில் மீண்டும் பள்ளி மாணவர்களின் கலை நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதைத்தவிர்த்து தமிழக அரசின் 20 துறைகளை சார்ந்த அலங்கார ஊர்திகளும் அணிவகுப்பில் இடம்பெறுகிறது. முன்னதாக கடந்த 22, 24 ஆகிய 2 தினங்களும் குடியரசு தின விழா அணிவகுப்பு ஒத்திகை நடைபெற்றது.
முக்கிய செய்திகள்
சினிமா
1 min ago
இந்தியா
35 mins ago
இந்தியா
59 mins ago
வாழ்வியல்
55 mins ago
சினிமா
1 hour ago
சினிமா
2 hours ago
உலகம்
2 hours ago
சினிமா
2 hours ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
சினிமா
2 hours ago