நாமக்கல் | யாசகம் பெற்ற ரூ.10 ஆயிரத்தை முதல்வர் நிவாரண நிதிக்கு வழங்கிய முதியவர்

By செய்திப்பிரிவு

நாமக்கல்: தூத்துக்குடி மாவட்டம் சாத்தான் குளம் ஆலங்கிணறு பகுதியைச் சேர்ந்தவர் பூல்பாண்டி(72). இவர் பல இடங்களில் யாசகம் பெற்று சேர்த்த ரூ.10 ஆயிரத்தை முதல்வர் பொது நிவாரண நிதிக்கு வழங்குவதாக கூறி நேற்று நாமக்கல் ஆட்சியர் அலுவலகத்தில் அலுவலர்களிடம் தெரிவித்தார். பின்னர் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள வங்கியில் ரூ.10 ஆயிரத்தை முதல்வர் நிவாரண நிதிக்கு செலுத்தினார்.

இதுதொடர்பாக அவர் கூறியதாவது: எனது மனைவி இறந்துவிட்டார். இரு மகள், மகன் உள்ளனர். அவர்கள் திருமணமாகி தனியாக வசிக்கின்றனர். தற்போது, நான் யாசகம் செய்து ஜீவனம் நடத்துகிறேன். மும்பையில் சலவைத் தொழில் செய்து வந்தேன். அங்கு பள்ளிகளில் மரக்கன்றுகள் நட்டு வந்தேன். யாசகம் மூலம் எனக்கு கிடைக்கும் பணத்தை முதல்வர் பொது நிவாரண நிதிக்கு தொடர்ந்து வழங்கி வருகிறேன். இவ்வாறு அவர் கூறினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வலைஞர் பக்கம்

10 mins ago

இந்தியா

22 mins ago

தமிழகம்

42 mins ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

ஜோதிடம்

41 mins ago

ஜோதிடம்

1 hour ago

இந்தியா

2 hours ago

ஜோதிடம்

2 hours ago

ஜோதிடம்

3 hours ago

இந்தியா

3 hours ago

மேலும்