தீபாவளி பண்டிகையையொட்டி கூடுதல் மெட்ரோ ரயில்கள் இயக்கம்

By செய்திப்பிரிவு

சென்னை: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மெட்ரோ ரயில் நிறுவனம் இன்றும், நாளையும் (அக்.21, 22) நெரிசல்மிகுந்த நேரங்களில் கூடுதல் ரயில்களை இயக்குகிறது. சென்னை மெட்ரோ ரயில் சேவையை பொறுத்தவரை, நெரிசல் மிகுந்த மாலை நேரங்களில் 5 முதல் இரவு 8 மணிவரை 5 நிமிட இடைவெளியில் ரயில்கள் இயக்கப்படுகிறது. இந்நிலையில், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, பயணிகள் வசதிக்காக இன்றும், நாளையும் (அக்.21, 22) மெட்ரோ ரயில் சேவை மாலை 5 முதல் இரவு 10 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

இதுதவிர, மாலை 5 முதல் இரவு 8 மணி வரை 5 நிமிடஇடைவெளியில் இயக்கப்பட்டு வரும் மெட்ரோ ரயில்சேவைகள், அக்.21, 22-ம் தேதிகளில் மட்டும் 5 நிமிடத்துக்கும் குறைவான இடைவெளியில் இயக்கப்படும். இத்தகவலை சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் தெரிவித்துள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

19 mins ago

தமிழகம்

22 mins ago

தமிழகம்

31 mins ago

சினிமா

16 mins ago

உலகம்

38 mins ago

தமிழகம்

49 mins ago

தமிழகம்

1 hour ago

உலகம்

1 hour ago

விளையாட்டு

41 mins ago

தமிழகம்

1 hour ago

உலகம்

1 hour ago

வாழ்வியல்

1 hour ago

மேலும்