அதிமுக பொன்விழா நிறைவு மற்றும் 51-வது ஆண்டு தொடக்க விழா பொதுக்கூட்டங்கள் அக்.17,20, 26-ல் அனைத்து மாவட்டங்களிலும் நடத்தப்படும் என்று இடைக்கால பொதுச் செயலாளர் பழனிசாமி அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கை: அதிமுக, பொன்விழா ஆண்டை நிறைவு செய்து, அக்.17-ம் தேதி 51-வது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது.
இதையொட்டி, கட்சிரீதியான மாவட்டங்கள், புதுச்சேரி,கர்நாடகா, ஆந்திரா, மகாராஷ்டிரா, கேரளா உள்ளிட்ட பிற மாநிலங்களில் அக்.17, 20, 26 ஆகிய3 நாட்களும் அதிமுக பொன்விழா நிறைவு மற்றும் 51-வது ஆண்டு தொடக்க விழா பொதுக்கூட்டங்கள் நடக்க உள்ளன.
கட்சி எம்எல்ஏக்கள், கட்சி சார்பு அமைப்புகளின் துணை நிர்வாகிகள் அனைவரும் தங்கள்மாவட்டத்தில் நடக்கும் பொதுக்கூட்டத்தில் கலந்துகொள்ள வேண்டுகிறேன்.
அக்.17-ம் தேதி ஆங்காங்கே எம்ஜிஆர், ஜெயலலிதா உருவச் சிலைகள், படங்களுக்கு மாலை அணிவித்து, மக்களுக்கு இனிப்புவழங்கியும், ஏழை, எளியோருக்கு அன்னதானம், நலத்திட்ட உதவிகள் வழங்கியும் கொண்டாட வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
19 mins ago
இந்தியா
4 hours ago
இந்தியா
2 hours ago
இந்தியா
38 mins ago
இந்தியா
3 hours ago
வாழ்வியல்
2 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
4 hours ago
ஜோதிடம்
4 hours ago
ஜோதிடம்
4 hours ago
விளையாட்டு
8 hours ago
இந்தியா
9 hours ago