ரவிக்குமார் எம்.பி தொகுதி நிதியில் இருந்து அரசுப் பள்ளிகள், கிளை நூலகங்களுக்கு புத்தகங்கள் வழங்கல்

By செய்திப்பிரிவு

விழுப்புரம் மற்றும் திண்டிவனம் கல்வி மாவட்டத்தில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளிகள் மற்றும் கிளை நூலகங்களுக்கு விழுப்புரம் மக்களவை உறுப்பினர் ரவிக்குமார், தனது தொகுதிக்கான உள்ளூர் வளர்ச்சி நிதியிலிருந்து புத்தகங்களை வழங்கினார்.

விழுப்புரம் அரசு மாதிரி மகளிர் மேல்நிலைப் பள்ளியில் நேற்று இதற்கான நிகழ்வு நடைபெற்றது.

ஆட்சியர் மோகன் தலைமையில், மக்களவை உறுப்பினர் ரவிக்குமார் முன்னிலையில் விழுப்புரம் கல்வி மாவட்டத்தில் 63 அரசு உயர்நிலைப் பள்ளிகள் மற்றும் திண்டிவனம் கல்வி மாவட்டத்தில் 22 அரசு உயர்நிலைப்பள்ளிகள் என மொத்தம் 85 அரசு உயர்நிலைப் பள்ளிகள் மற்றும் கிளை நூலகங்களுக்கு ரூ.2 லட்சம் மதிப்பீட்டிலான புத்தகங்கள் வழங்கப்பட்டன.

இந்நிகழ்ச்சியில் திண்டிவனம் சார் ஆட்சியர் அமித், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் கிருஷ்ணப்பிரியா, விழுப்புரம் மாவட்ட கல்வி அலுவலர் காளிதாஸ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

2 hours ago

க்ரைம்

2 hours ago

விளையாட்டு

3 hours ago

இந்தியா

2 hours ago

வணிகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

விளையாட்டு

5 hours ago

தமிழகம்

11 hours ago

இந்தியா

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

க்ரைம்

6 hours ago

மேலும்