மறைமலைநகர் | பள்ளியில் இருந்து வீடு திரும்பும்போது ஸ்கூட்டர் மீது டிராக்டர் மோதி விபத்து: 2 குழந்தைகள் பரிதாபமாக உயிரிழப்பு

By செய்திப்பிரிவு

மறைமலைநகர்: செங்கல்பட்டு மாவட்டம் சிங்கப்பெருமாள் கோவில் அருகே கருநீலம் பகுதியைச் சேர்ந்தவர் கோவிந்தராஜ். எலக்ட்ரீஷியன். இவருடைய மனைவி தேன்மொழி (26). இவர்களுக்கு சித்தார்த் (4), லோகேஷ் (3) ஆகிய 2 குழந்தைகள் உள்ளனர்.

நேற்று முன்தினம் மாலை பள்ளியில் இருந்து இரண்டு குழந்தைகளையும் அழைத்து கொண்டு தேன்மொழி இருசக்கர வாகனத்தில் திரும்பும்போது எதிரே வந்த இருசக்கர வாகனத்தில் லேசாக உரசி நிலைதடுமாறி கீழே விழுந்துள்ளார்.

அப்போது பின்னால் வந்த டிராக்டர் இருசக்கர வாகனத்தின் மீது போதியது. இதில் தாயின் கண்முன்னே இரண்டு குழந்தைகளும் படுகாயம் அடைந்தனர். இதில் அதே இடத்திலேயே சித்தார்த் உயிரிழந்தார். உடனே அக்கம் பக்கத்தினர் பலத்த காயமடைந்த தேன்மொழி மற்றும் குழந்தை லோகேஷை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதில் வழியிலேயே லோகேஷும் உயிரிழந்தார்.

வழக்குப்பதிவு

தற்போது மேல் சிகிச்சைக்காக தேன்மொழி சென்னை அரசு பொது மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

விபத்து குறித்த தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்துக்கு வந்த குரோம்பேட்டை போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு போலீஸார் உடலை மீட்டு பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். தாயின் கண் முன்னே 2 குழந்தைகளும் உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஓடிடி களம்

8 mins ago

தமிழகம்

15 mins ago

தமிழகம்

29 mins ago

தமிழகம்

49 mins ago

விளையாட்டு

1 hour ago

தமிழகம்

2 mins ago

இந்தியா

1 hour ago

இந்தியா

2 hours ago

விளையாட்டு

2 hours ago

இணைப்பிதழ்கள்

2 hours ago

தமிழகம்

2 hours ago

இணைப்பிதழ்கள்

2 hours ago

மேலும்