சென்னை: கரோனா தொற்று பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் முதல்வர் ஸ்டாலினை தொடர்பு கொண்டு பிரதமர் மோடி நலம் விசாரித்தார்.
முதல்வர் மு.க.ஸ்டாலின் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில், பிரதமர் மோடி இன்று முதல்வர் மு.க.ஸ்டாலினை தொடர்பு கொண்டு நலம் விசாரித்தார். அப்போது அவரிடம் தான் நன்கு குணமடைந்து வருவதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
மேலும் சென்னையில் ஜுலை 28ம் தேதி துவங்க உள்ள உலக செஸ் விளையாட்டு போட்டிக்கு அழைப்பு விடுக்க நேரில் வருவதாக இருந்ததை குறிப்பிட்டு தான் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதன் காரணமாக நாடாளுமன்ற உறுப்பினர்கள் டி.ஆர்.பாலு, கனிமொழி, விளையாட்டு துறை அமைச்சர், தலைமை செயலாளர் ஆகியோரை அனுப்பி வைப்பதாகவும், துவக்க விழா நிகழ்ச்சியில் பிரதமர் அவசியம் கலந்து கொள்ள வேண்டும் என்றும் அழைப்பு விடுத்தார்.