புதுச்சேரி: நடுக்கடலில் படகு பழுதாகி தவித்த 9 மீனவர்களை இந்திய கடலோர காவல்படையினர் மீட்டு இன்று கரைக்கு அழைத்து வந்தனர். அவர்களின் படகையும் இழுந்து வந்து கரை சேர்த்தனர்.
புதுச்சேரி தேங்காய்திட்டு மீன்பிடி துறைமுகத்திலிருந்து ஹத்தீம் பாஷா, கதிரேசன், சரண்ராஜ், அபின், தர்மலிங்கம், மணியப்பன், சுரேஷ், குமணன், முருகன் ஆகிய 9 மீனவர்கள் கடலில் மீன்பிடிக்க சென்றனர்.
மரக்காணம் தாண்டி சசிகோலா தோட்டம் பகுதியில் கடலில் 3 நாட்டிக்கல் மைல் தொலைவில் கடலில் படகு கடந்த 5ம் தேதி பழுதானது. இதையடுத்து மீனவர்கள் படகை பழுதை நீக்க முயற்சித்தனர். ஆனால் முடியவில்லை.
இதையடுத்து மீன் வளத்துறைக்கு கடந்த 6ம் தேதி தகவல் தெரிவித்தனர். அதனடிப்படையில் இந்திய கடலோர காவல் படைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் மீனவர்களை தேடத் தொடங்கினர்.
கடலில் படகு பழுதாகி தவித்த மீனவர்களை 7-ம் தேதி கண்டறிந்தனர். அதையடுத்து அவர்களுக்கு உணவு, தண்ணீர் தந்து படகை பழுது நீக்க முயற்சித்தனர். ஆனால், படகை சரி செய்ய முடியவில்லை. இதையடுத்து 9 மீனவர்களுடன் பழுதாகி நின்ற படகையும் கடலில் இழுத்து வந்து இன்று கரை சேர்ந்தனர்.
முக்கிய செய்திகள்
ஜோதிடம்
1 hour ago
ஜோதிடம்
1 hour ago
தமிழகம்
7 hours ago
இந்தியா
7 hours ago
தமிழகம்
8 hours ago
சுற்றுச்சூழல்
9 hours ago
தமிழகம்
9 hours ago
சுற்றுலா
9 hours ago
வாழ்வியல்
9 hours ago
வாழ்வியல்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago