அருப்புக்கோட்டை தொகுதியில் போட்டியிடும் திமுக வேட் பாளரும் முன்னாள் அமைச்ச ருமான கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரனை ஆதரித்து அருப்புக்கோட்டையில் கனிமொழி எம்பி நேற்று முன்தினம் இரவு பிரச்சாரம் செய்தார். மாலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை மட்டுமே பிரச்சாரம் செய்ய அனுமதி வழங்கப்பட்டிருந்தது. ஆனால், கனிமொழி எம்பி இரவு 8.30 மணிக்கு மேல் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார்.
அதையடுத்து அருப்புக் கோட்டை சட்டப் பேரவைத் தொகுதி தேர்தல் பிரச்சார கண்காணிப்புக் குழுவைச் சேர்ந்த சபாபதி அளித்த புகாரின்பேரில், கனிமொழி, கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் மற்றும் திமுகவினர் மீது அருப்புக்கோட்டை நகர் போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.