தொடரும் இலங்கை கடற்படையின் அட்டூழியம்: ராமேஸ்வரம் மீனவர்கள் 16 பேர் கைது

By செய்திப்பிரிவு

கச்சத்தீவு அருகே நள்ளிரவில் மீன் பிடித்துக் கொண்டிருந்த ராமேஸ்வரத்தைச் சேர்ந்த மீனவர்கள் 16 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர்,

ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து 500க்கும் மேற்பட்ட மீனவர்கள் கச்சத்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி 16 மீனவர்களை கைது செய்து, அவர்களின் 3 விசைப்படகுகளை பறிமுதல் செய்துள்ளனர்.

ஏற்கெனவே எல்லை தாண்டி மீன்பிடித்ததாக இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட 21 மீனவர்கள் இலங்கை சிறைகளில் உள்ளனர். மேலும் அவர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட படகுகளை இலங்கை அரசு ஏலத்தில் விட்டு வருகிறது.

தொடரும் இலங்கை கடற்படையினரின் தமிழக மீனவர்கள் மீதான கைது நடவடிக்கையை கண்டித்து ராமேஸ்வரத்தில் மீனவர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில், தற்போது இலங்கை கடற்படையினர் மேலும் 16 மீனவர்களை கைது செய்யதுள்ளனர்.

இது ராமேஸ்வரம் மீனவர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இலங்கை கடற்படையினரால் சிறைப்பிடிக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்களின் 105 படகுகள் சட்டவிரோதமாக இலங்கை அரசால் ஏலம் விடப்படும் நடவடிக்கையை உடனடியாகத் தடுத்து நிறுத்தக்கோரி பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் நேற்று கடிதம் எழுதி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

2 mins ago

இந்தியா

33 mins ago

தமிழகம்

13 mins ago

இந்தியா

48 mins ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

உலகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

க்ரைம்

2 hours ago

மேலும்