ஊரடங்கின்போது பேருந்து, ரயில் பயணிகளிடம் அதிக கட்டணம் வசூலிக்கும் ஆட்டோ, கார் ஓட்டுநர்கள் மீது நடவடிக்கை எடுக்கப் படும் என்று காவல் துறையினர் எச்சரித்துள்ளனர்.
தமிழகத்தில் கரோனா 3-வதுஅலை பரவலை தடுக்க தினமும்இரவு 10 முதல் காலை 5 மணி வரைஇரவு நேர ஊரடங்கும், ஞாயிற்றுக் கிழமைகளில் முழு ஊரடங்கும் அமல்படுத்தப்பட்டுள்ளன. கடந்த2 ஞாயிற்றுக்கிழமைகளிலும் முழுஊரடங்கு கடைபிடிக்கப்பட்டாலும் பேருந்து, ரயில் பயணிகள் டிக்கெட்டை காட்டி சாலைகளில் செல்வதற்கு அனுமதி வழங்கப்பட்டது.
பயணிகளின் வசதிக்காக வாடகை ஆட்டோ, கார்கள் இயங்கவும் அனுமதி அளிக்கப்பட்டது. இந்நிலையில், ஊரடங்கை காரணம் காட்டி பயணிகளிடம் 3 மடங்கு வரை அதிக கட்டணம் வசூலித்ததாக வாடகை வாகன ஓட்டிகள் மீதுபரவலாக குற்றச்சாட்டு எழுந்தது. இதனால் அதிக கட்டணம் கேட்கும்ஓட்டுநர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று டிஜிபி சைலேந்திரபாபு எச்சரிக்கை விடுத்தார்.
இந்நிலையில், இன்று ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு கடைபிடிக்கப்படும் நிலையில், பயணிகளிடம் அதிக கட்டணம் வசூலிக்கும் ஓட்டுநர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல் துறைஅதிகாரிகள் மீண்டும் எச்சரிக்கை விடுத்துள்ளனர். மேலும், இதைக்கண்காணிக்கவும் பயணிகளின் வசதிக்காகவும் பேருந்து, ரயில் நிலையங்களின் வெளியே போலீஸார் நிறுத்தப்படுவார்கள் என்று அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.
அதிக கட்டணம் கேட்கும் ஓட்டுநர்கள் குறித்து காவல் துறையின் கட்டுப்பாட்டு அறை எண் 100-ல்புகார் தெரிவித்தால், அருகில் ரோந்துப் பணியில் உள்ள போலீஸார் உதவுவர் என்று காவல் துறை யினர் தெரிவித்துள்ளனர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
36 mins ago
ஜோதிடம்
2 hours ago
ஜோதிடம்
2 hours ago
விளையாட்டு
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago
விளையாட்டு
10 hours ago
இந்தியா
10 hours ago
விளையாட்டு
12 hours ago
இந்தியா
12 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
13 hours ago