மதுரை மீனாம்பாள்புரத்தைச் சேர்ந்தவர் பாலமுருகன். இவர் திருமங்கலம் அருகில் உள்ள தங்களாச்சேரியில் விவசாயம் செய்கிறார். இவருக்கு மகள், மகன் உள்ளனர். மகள் கல்லூரிப் படிப்பு முடித்து வீட்டில் இருக் கிறார்.
பாலமுருகனின் அக்காள் முத்துமீனாள் சோழவந்தான் அருகே மேலக்காலில் வசிக்கிறார். இவரது 2-வது மகன் பொறியியல் பட்டதாரியான தீபன் சக்கரவர்த்தி, பாலமுருகனின் மகளை திருமணம் செய்ய விருப்பம் தெரிவித்து பெண் கேட்க வருவதாகக் கூறி யிருக்கிறார்.
தீபன் சக்ரவர்த்தியை திருமணம் செய்ய பாலமுருகன் மகளுக்கு விருப்பம் இல்லை. இதனால் இரு குடும்பத்தினரிடையே பிரச்சினை ஏற்பட்டது.
இந்நிலையில் பாலமுருகனின் மனைவி ராஜேஸ்வரி வீட்டில் மகன், மகள் மற்றும் உறவினருடன் டிச.23 பிற்பகலில் பேசிக் கொண்டிந்தார். அப்போது அங்கு வந்த தீபன்சக்கரவர்த்தி பெட்ரோல் குண்டு ஒன்றை வீட்டுவாசலில் வீசிவிட்டு தப்பினார்.
பாட்டில் சிதறி தீப்பற்றியது. ஆனால் யாருக்கும் காயம் ஏற்பட வில்லை.
இது குறித்து புகாரின் பேரில் தீபன்சக்கரவர்த்தி மீது செல்லூர் போலீஸார் வழக்குப்பதிவு செய்து தேடிவருகின்றனர்.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
33 mins ago
விளையாட்டு
1 hour ago
சினிமா
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
3 hours ago
தமிழகம்
5 hours ago
இந்தியா
4 hours ago