தந்தை, மகன் கொலையில் கைதான சாத்தான்குளம் காவலர் ஜாமீன் மனு: விசாரணை நீதிமன்றத்தை அணுக உத்தரவு 

By கி.மகாராஜன்

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் இடைக்கால ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்த காவலருக்கு, விசாரணை நீதிமன்றத்தை அணுக உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

சாத்தான்குளம் காவல் நிலையத்தில் ஜெயராஜ், அவர் மகன் பெனிக்ஸ் ஆகியோர் கொலை செய்யப்பட்ட வழக்கில் காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் உட்பட 9 பேர் கைது செய்யப்பட்டனர்.

இவர்களில் காவலர் முருகன், இடைக்கால ஜாமீன் கேட்டு உயர் நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்தார்.

அதில், என் மீதான வழக்கில் மதுரை நீதிமன்றத்தில் சாட்சிகள் விசாரணை நடைபெற்று வருகிறது. என் சகோதரியின் மகன் திருமணம் டிச. 10-ல் நடைபெறுகிறது. தாய் மாமா என்ற முறையில் திருமணத்தில் நான் கண்டிப்பாக கலந்து கொள்ள வேண்டும். எனவே டிச. 8 முதல் 12 வரை இடைக்கால ஜாமீன் வழங்க வேண்டும் எனக் கூறியிருந்தார்.

இந்த மனு நீதிபதி இளங்கோவன் முன்பாக விசாரணைக்கு வந்தது. மனுதாரர் இடைக்கால ஜாமீனுக்காக விசாரணை நீதிமன்றத்தை அணுக உத்தரவிட்டு மனுவை தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

42 mins ago

விளையாட்டு

1 hour ago

வணிகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

விளையாட்டு

3 hours ago

க்ரைம்

3 hours ago

சுற்றுச்சூழல்

3 hours ago

க்ரைம்

4 hours ago

இந்தியா

3 hours ago

சினிமா

5 hours ago

கருத்துப் பேழை

5 hours ago

சுற்றுலா

5 hours ago

மேலும்