திருச்சியில் விடுதியில் தங்கிப் படித்த மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக பள்ளித் தாளாளர் கைது: உடந்தையாக இருந்த மனைவியும் சிக்கினார்

By செய்திப்பிரிவு

திருச்சியில் விடுதியில் தங்கிப் படித்த8-ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக பள்ளித் தாளாளரையும், அவருக்கு உடந்தையாக இருந்ததாக அப்பள்ளியின்ஆசிரியையான அவரது மனைவியையும் போக்ஸோ சட்டத்தின்கீழ் போலீஸார் நேற்று கைது செய்தனர்.

திருச்சி புத்தூர் வண்ணாரப்பேட்டையில் அரசு உதவிபெறும் சி.இ மேல்நிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு 8-ம் வகுப்பு மாணவி ஒருவர், தனது 2 சகோதரிகள் மற்றும் ஒரு சகோதரருடன் இப்பள்ளியில் உள்ள விடுதியில் தங்கிப் படித்துள்ளார்.

இந்நிலையில், பள்ளியின் தாளாளர் ஜேம்ஸ்(52), அந்த மாணவியை பள்ளியில் உள்ள பொருட்கள் வைக்கும்அறைக்கு வரவழைத்து பாலியல்ரீதியாக தொந்தரவு கொடுத்து வந்துஉள்ளார். இதனால் பாதிக்கப்பட்டஅந்த மாணவி, தாளாளரின் மனைவியும், அதே பள்ளியில் ஆசிரியையுமான ஸ்டெல்லா மேரியிடம்(52) கூறிஉள்ளார்.

அதற்கு அந்த ஆசிரியை, மாணவியைத் திட்டியதுடன், இச்சம்பவத்தைவேறு யாரிடமும் சொல்லக்கூடாதுஎனவும் மிரட்டியதாக கூறப்படுகிறது. இதனால் பயத்தின் காரணமாக அழுது கொண்டும், மன அழுத்தத்தால் சரிவர சாப்பிடாமலும் இருந்ததால் பள்ளி நிர்வாகம் கடந்த 18-ம் தேதிஅந்த மாணவியையும், அவர்களது சகோதர, சகோதரிகளையும், உறவினர்களை வரவழைத்து வீட்டுக்கு அனுப்பி வைத்துவிட்டனர்.

வீட்டுக்குச் சென்ற பிறகு, தாளாளர் மூலம் தனக்கு நேர்ந்த கொடுமைகள் குறித்து உறவினர்களிடம் மாணவி கூறியுள்ளார். இதனால் பதறிப்போன உறவினர்கள் காவல்உயரதிகாரிகளுக்கு தகவல் அளித்துள்ளனர். மேலும் ரங்கம்அனைத்து மகளிர் காவல் நிலையத்திலும் புகார் அளித்துள்ளனர்.

அதன் மீது விசாரணை நடத்திய இன்ஸ்பெக்டர் மீரா பாய் மற்றும் போலீஸார், போக்ஸோ உள்ளிட்ட 3 பிரிவுகளின்கீழ் வழக்குப் பதிவு செய்து பள்ளி தாளாளர் ஜேம்ஸ், அவரது மனைவி ஸ்டெல்லா மேரி ஆகியோரை நேற்று கைது செய்தனர்.

பாதிக்கப்பட்ட மாணவி மற்றும் அவர்களது சகோதர, சகோதரிகளின் தந்தை ஏற்கெனவே உயிரிழந்துவிட்ட நிலையில், தாய் அவர்களைவிட்டு பிரிந்து சென்றுவிட்டார் என்று கூறப்படுகிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

4 hours ago

சினிமா

5 hours ago

விளையாட்டு

6 hours ago

வணிகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

விளையாட்டு

8 hours ago

க்ரைம்

8 hours ago

சுற்றுச்சூழல்

8 hours ago

க்ரைம்

8 hours ago

இந்தியா

8 hours ago

சினிமா

10 hours ago

கருத்துப் பேழை

9 hours ago

மேலும்