சிவகங்கை அருகே மர்ம பொருள் வெடித்து 3 சிறுவர்கள் காயம்

By செய்திப்பிரிவு

சிவகங்கை அருகே மர்மபொருள் வெடித்து 3 சிறுவர்கள் காய மடைந்தனர். வெடித்தது நாட்டு வெடிகுண்டா என போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சிவகங்கையை அடுத்த கீழக் குளத்தில் உள்ள பழைய பள்ளிக் கட்டிடத்தில் நேற்று மாலை அதே கிராமத்தைச் சேர்ந்த செல்ல முத்து மகன் ராம்கிஷோர் (8), காளிமுத்து மகன் நவீன்குமார் (13), முத்துராக்கு மகன் வைணவன் (11) ஆகியோர் விளையாடிக் கொண்டிருந்தனர்.

அங்கு சிறிய பெட்டி போன்ற பொருள் கிடந்தது. அதை தட்டிப் பார்த்தபோது சத்தம் கேட்டது. அதை திறக்க முயன்றனர். மிகவும் சிரமமாக இருந்ததால் பெட்டியை சாலையில் வீசி உடைக்க முயன்றனர். அப்போது அது பலத்த சத்தத்துடன் வெடித்தது. இதில் மூவரும் காயமடைந்தனர். அவர்களை கிராம மக்கள் சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர். படுகாயமடைந்த ராம்கிஷோர் தீவிர சிகிச்சைக்காக மதுரை மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

வெடித்த மர்மபொருள் குறித்து சிவகங்கை போலீஸார் விசாரித்து வருகின்றனர். சம்பவ இடத்தில் வெடிகுண்டு நிபுணர்கள் தடயங்களை சேகரித்தனர். வெடித்த பொருளின் எஞ்சிய பகுதிகளை சேகரித்து ஆய் வகத்துக்கு அனுப்பினர்.

வெடித்தது நாட்டு வெடிகுண்டு தயாரிப்புக்குரிய வெடிபொருளாக இருக்குமோ என்ற சந்தேகத்தின் அடிப்படையில் போலீஸார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

2 hours ago

ஜோதிடம்

2 hours ago

தொழில்நுட்பம்

7 hours ago

விளையாட்டு

8 hours ago

சினிமா

9 hours ago

தமிழகம்

10 hours ago

விளையாட்டு

12 hours ago

இந்தியா

13 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

13 hours ago

இந்தியா

14 hours ago

இந்தியா

14 hours ago

மேலும்