குப்பைகளைத் தூக்கி எறிபவர்களுக்கு எவ்வளவு அபராதம்? - சென்னை மாநகராட்சி அறிவிப்பு

By செய்திப்பிரிவு

சென்னையில் பொது இடங்களில் குப்பைகளைத் தூக்கி எறிபவர்களுக்கு எவ்வளவு அபராதம் விதிக்கப்படும் என்ற அறிவிப்பை சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ளது.

இது தொடர்பாக, சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, பொது மற்றும் தனியார் இடங்களில் குப்பைகளைத் தூக்கி எறிபவர்கள் / வாகனங்களிலிருந்து குப்பைகளைக் கொட்டுபவர்களுக்கு ரூ.500 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

தரம் பிரிக்கப்படாத குப்பைகளைக் கொட்டுபவர்களில் தனிநபர் இல்லங்களுக்கு ரூ.100 அபராதம், அடுக்குமாடிக் குடியிருப்புகளுக்கு ரூ.1,000 அபராதம், பெருமளவு குப்பை உருவாக்குபவர்களுக்கு ரூ.5,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

பொது இடங்களில் கட்டுமான மற்றும் இடிபாடு கழிவுகளைக் கொட்டுபவர்களில் 1 டன் வரை கொட்டுபவர்களுக்கு ரூ.2,000 அபராதம், 1 டன்னுக்கு மேல் கொட்டுபவர்களுக்கு ரூ.5,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

தோட்டக்கழிவுகள், மரக்கழிவுகளைப் பொது இடங்களில் கொட்டுபவர்களுக்கு ரூ.200 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

கழிவுநீர்ப் பாதை / கால்வாய் நீர்நிலைகளில் குப்பை கொட்டுபவர்களுக்கு ரூ.500 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

திடக்கழிவுகளை எரிப்பவர்களில் தனியார் இடங்களுக்கு ரூ.500 அபராதம், பொது இடங்களுக்கு ரூ.1,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

10 mins ago

இந்தியா

39 mins ago

உலகம்

53 mins ago

வணிகம்

1 hour ago

சினிமா

1 hour ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

வாழ்வியல்

4 hours ago

க்ரைம்

3 hours ago

இந்தியா

4 hours ago

மேலும்