சென்னையில் பொது இடங்களில் குப்பைகளைத் தூக்கி எறிபவர்களுக்கு எவ்வளவு அபராதம் விதிக்கப்படும் என்ற அறிவிப்பை சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ளது.
இது தொடர்பாக, சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, பொது மற்றும் தனியார் இடங்களில் குப்பைகளைத் தூக்கி எறிபவர்கள் / வாகனங்களிலிருந்து குப்பைகளைக் கொட்டுபவர்களுக்கு ரூ.500 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
தரம் பிரிக்கப்படாத குப்பைகளைக் கொட்டுபவர்களில் தனிநபர் இல்லங்களுக்கு ரூ.100 அபராதம், அடுக்குமாடிக் குடியிருப்புகளுக்கு ரூ.1,000 அபராதம், பெருமளவு குப்பை உருவாக்குபவர்களுக்கு ரூ.5,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
பொது இடங்களில் கட்டுமான மற்றும் இடிபாடு கழிவுகளைக் கொட்டுபவர்களில் 1 டன் வரை கொட்டுபவர்களுக்கு ரூ.2,000 அபராதம், 1 டன்னுக்கு மேல் கொட்டுபவர்களுக்கு ரூ.5,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
தோட்டக்கழிவுகள், மரக்கழிவுகளைப் பொது இடங்களில் கொட்டுபவர்களுக்கு ரூ.200 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
கழிவுநீர்ப் பாதை / கால்வாய் நீர்நிலைகளில் குப்பை கொட்டுபவர்களுக்கு ரூ.500 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
திடக்கழிவுகளை எரிப்பவர்களில் தனியார் இடங்களுக்கு ரூ.500 அபராதம், பொது இடங்களுக்கு ரூ.1,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
10 mins ago
இந்தியா
39 mins ago
உலகம்
53 mins ago
வணிகம்
1 hour ago
சினிமா
1 hour ago
இந்தியா
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
வாழ்வியல்
4 hours ago
க்ரைம்
3 hours ago
இந்தியா
4 hours ago