ஆடுகளை மீட்க முயன்ற போது நேர்ந்த விபரீதம்: தேங்கியிருந்த மழைநீரில் மூழ்கி சகோதரர்கள் உள்ளிட்ட 3 பேர் உயிரிழப்பு

By க.ராதாகிருஷ்ணன்

ஆடுகளை மீட்க முயன்ற போது தேங்கியிருந்த மழைநீரில் மூழ்கி சகோதரர்கள் உள்ளிட்ட 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இது குறித்து, லாலாபேட்டை போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.

கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் வட்டம் புனவாசிப்பட்டி சிவலிங்கபுரத்தைச் சேர்ந்தவர் காளீஸ்வரன். இவர் மகன் நவீன்குமார் (13). அப்பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் 8-ம் வகுப்பு மாணவர். அதேபகுதியைச் சேர்ந்த ஆறுமுகம் மகன்கள் வசந்த் (13), கவின் என்கிற ஆ.மயில்முருகன் (12). இவர்கள் 3 பேரும் அப்பகுதியில் இன்று (அக். 1-ம் தேதி) ஆடு மேய்த்துள்ளனர்.

அப்போது, அங்குள்ள தனியார் நிலத்தில் மண் எடுக்கப்பட்ட இடத்தில் தேங்கியிருந்த மழைநீர் குட்டையில் இறங்கிய ஆடுகளை மீட்க குட்டையில் இறங்கிய 3 பேரும் அடுத்தடுத்து தண்ணீரில் மூழ்கி மூச்சுத்திணறி உயிரிழந்தனர்.

இதையடுத்து, அப்பகுதி மக்கள் 3 பேரின் சடலங்களை மீட்டனர். இது குறித்து, லாலாபேட்டை போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

31 mins ago

இந்தியா

36 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

சினிமா

2 hours ago

இந்தியா

3 hours ago

வணிகம்

10 hours ago

சுற்றுச்சூழல்

3 hours ago

சுற்றுலா

3 hours ago

கல்வி

3 hours ago

மேலும்