சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே கொந்தகையில் நடைபெறும் அகழாய்வில் மேலும் ஒரு மனித எலும்புக்கூடு கண்டெடுக்கப்பட்டது.
திருப்புவனம் அருகே கீழடி, கொந்தகை, அகரம், மணலூர் ஆகிய இடங்களில் பிப்.13-ம் தேதி முதல் 7-ம் கட்ட அகழாய்வுப் பணி நடந்து வருகிறது. இதுவரை 700-க்கும் மேற்பட்ட தொல்பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. கீழடியில் இதுவரை மண் பானை, குவளை, தங்க வளையம், பகடை, உழவுக் கருவி, கருப்பு, சிவப்பு நிற பானை ஓடுகள், மண் குவளைகள், பாசிகள் போன்றவை கண்டறிப்பட்டன.
இந்நிலையில் கொந்தகையில் இதுவரை 5 குழிகள் தோண்டப்பட்டுள்ளன. சில தினங்களுக்கு முன்பு ஒரு குழியில் மனித எலும்புக்கூடு கண்டெடுக்கப்பட்டது. அதன் அருகிலேயே மற்றொரு மனித எலும்புக்கூடு நேற்று கண்டெடுக்கப்பட்டது. இது 3 அடி நீளம் கொண்டதாக உள்ளது. இது ஆணா?, பெண்ணா? என்பது குறித்து தொல்லியல் ஆய்வாளர்கள் ஆய்வு செய்து வருகின்றனர்.
முக்கிய செய்திகள்
இந்தியா
15 mins ago
தமிழகம்
35 mins ago
தமிழகம்
1 hour ago
உலகம்
1 hour ago
சினிமா
2 hours ago
தமிழகம்
2 hours ago
வலைஞர் பக்கம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
சினிமா
3 hours ago
வாழ்வியல்
3 hours ago
உலகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago