அதிகாரிகள் சொன்னதை செய்யாததால் விவசாயம் செய்ய முடியவில்லை: கீழடி அகழாய்வுக்கு இலவசமாக நிலம் கொடுத்த விவசாயிகள் புகார்

By செய்திப்பிரிவு

‘அதிகாரிகள் சொன்னதை செய் யாததால் விவசாயம் செய்ய முடியவில்லை,’ என கீழடி அக ழாய்வுக்கு இலவசமாக நிலம் கொடுத்த விவசாயிகள் புகார் தெரிவித்துள்ளனர்.

சிவகங்கை மாவட்டம், திருப்பு வனம் அருகே கீழடியில் 110 ஏக்கரில் தொல்லியல் மேடு உள்ளது. இங்கு 2014-ம் ஆண்டு முதல் அகழாய்வு நடந்து வருகிறது. ஏற்கெனவே மூன்று கட்ட அகழாய்வு மத்திய தொல்லியல் துறை மூலமாகவும், நான்கு, ஐந்து மற்றும் 6-ம் கட்ட அகழாய்வு, தமிழக தொல்லியல் துறை மூலமும் நடந்தன. தற்போது 7-ம் கட்ட அகழாய்வு நடந்து வருகிறது. அகழாய்வு நடக்கும் இடங்கள் பெரும்பாலும் தனியார் விவசாய நிலங்கள்.

இதனால் அகழாய்வு தொடங் கியபோது, குழிகள் தோண்டினால் விவசாயம் பாதிக்கும் எனக் கூறி விவசாயிகள் நிலத்தை தர மறுத்தனர். இதையடுத்து வருவாய்த்துறை, தொல்லியல் துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி, தேவையான உதவிகளை செய்வதாக உறுதி அளித்தனர். இதையடுத்து விவசாயிகள் தங்களது நிலத்தை அகழாய்வுப் பணிக்கு இலவசமாக வழங்கினர். கீழடியில் ஆறு கட்ட அகழாய்வு முடிந்த நிலையில், அதற்காக தோண்டப்பட்ட குழிகளை மூடி விட்டனர்.

இந்நிலையில் அதிகாரிகள் சொன்னதை செய்யாததால், விவ சாயம் செய்ய முடியவில்லை என விவசாயிகள் புகார் கூறினர்.

இதுகுறித்து கொந்தகையைச் சேர்ந்த சுரேஷ் என்பவர் கூறிய தாவது: அகழாய்வுப் பணிக்கு நானும் எனது சகோதரி சேதுராமுவும் தலா ஒரு ஏக்கர் நிலத்தை கொடுத்தோம். எனது சகோதரியின் நிலத்தில் மின்கம்பம் ஒன்று சேதமடைந்து உள்ளது. அகழாய்வு தொடங்கிய போது மின்சாரத்தை சரிசெய்து கொடுப் பதாகவும், சொட்டுநீர் பாசன வசதி ஏற்படுத்தி தருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர். அகழாய்வுக்காக தோண்டிய குழிகளை மூடியநிலையில், இதுவரை சொன் னதை செய்யவில்லை. இதனால் விவசாயம் செய்ய முடியாமல் தவிக்கிறோம்,’ என்றார்.

இதுகுறித்து தொல்லியல்துறை அதிகாரிகள் கூறுகையில், விவசாயிகள் பிரச்சினைகள் குறித்து மாவட்ட நிர்வாகத்திடம் தெரிவித்துள்ளோம், என்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

2 hours ago

விளையாட்டு

4 hours ago

க்ரைம்

4 hours ago

உலகம்

5 hours ago

விளையாட்டு

6 hours ago

வேலை வாய்ப்பு

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

விளையாட்டு

7 hours ago

கல்வி

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

மேலும்