வேலூர் மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களில் சந்தாதாரர்களின் விருப்பத்துக்கு மாறாக தனியார் நிறுவன செட்டாப் பாக்ஸ்களை பொருத்தும் கேபிள் டிவி ஆபரேட்டர்கள், எம்எஸ்ஓக்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர்கள் குமார வேல் பாண்டியன் (வேலூர்), பா.முருகேஷ் (தி.மலை) ஆகி யோர் எச்சரித்துள்ளனர்.
வேலூர் மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் வெளி யிட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘‘ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனம் மூலம் சுமார் 914 உள்ளுர் கேபிள் டிவி ஆபரேட்டர்கள் இயங்கி வருகின்றனர். இவர்கள் வாயிலாக மாதச்சந்தா தொகை ரூ.140 மற்றும் 18 சதவீதம் ஜிஎஸ்டி கட்டணத்துடன் கூடிய ஒரு லட்சத்து 15 ஆயிரத்து 738 செட்டாப் பாக்ஸ்கள் இலவசமாக பொதுமக்கள் பயன்பாட்டுக்காக அரசு வழங்கியுள்ளது.
இந்நிலையில், அரசு செட்டாப் பாக்ஸ்கள் பெற்று பயனடைந்து வரும் சந்தாதாரர்களின் விருப்பத்துக்கு மாறாக சில ஆப ரேட்டர்கள் பிற தனியார் நிறுவனங்களின் டிஜிட்டல் செட்டாப் பாக்ஸ்களை பொருத்தியும், அரசு சிக்னல் இனி வராது என்று தவறான தகவலை பொதுமக்களிடம் கூறி அரசு செட்டாப் பாக்ஸை நீக்கி வருவதாக தெரியவந்துள்ளது. இதன்மூலம், தமிழ்நாடு அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுத்தி வரும் உள்ளுர் கேபிள் டிவி ஆபரேட்டர்கள் மீதும் அரசு கேபிள் டிவி நடத்தி வரும் உள்ளுர் கேபிள் டிவி ஆபரேட்டர்களை பிற தனியார் நிறுவனங்களுக்கு மாறக்கோரி வற்புறுத்தும் பல்முனை ஆபரேட்டர்களின் (எம்எஸ்ஓ) மீதும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
சந்தாதாரர்களான பொது மக்களின் அனுமதியில்லாமல் அரசு கேபிள் டிவி செட்டாப் பாக்ஸ்களை நீக்கிவிட்டு தனியார் செட்டாப் பாக்ஸ்களை நிறுவும் நபர்கள் குறித்து 0416-2255735 என்ற எண்ணில் பொதுமக்கள் தயங் காமல் புகார் தெரிவிக்கலாம்’’ என தெரிவித்துள்ளார்.
திருவண்ணாமலை
தி.மலை மாவட்ட ஆட்சியர் பா.முருகேஷ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “தி.மலை மாவட்டத்தில் அரசு கேபிள் டிவி மூலம் இலவச செட்டாப் பாக்ஸ் வழங்கப்பட்டு, 200-க்கும் மேற்பட்ட சேனல்கள் ஒளிபரப்பப்படுகின்றன. இதற்காக, ரூ.140 மற்றும் ஜிஎஸ்டி வரியுடன் குறைந்த கட்டணம் வசூலிக்கப்படுகிறது. அரசு கேபிள் டிவி நிறுவன சேவையை பெற விரும்பும் பொதுமக்கள், உள்ளூர் கேபிள் டிவி ஆபரேட்டர்களிடம் கேட்டு பெறலாம்.
அரசு கேபிள் டிவி சேவையை வழங்கவில்லை என்றால் 18004252911 என்ற கட்டணம் இல்லாத தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு புகார் தெரி விக்கலாம். செட்டாப் பாக்ஸ் களுக்கு உரிமை கோர முடியாது என்பதால், குடிபெயர்ந்து வேறு இடத்துக்கு சென்றாலும் அல்லது தனியார் கேபிள் டிவி இணைப்பை பயன்படுத்தினால், தமிழக அரசு கேபிள் டிவி நிறுவனம் வழங்கிய செட்டாப் பாக்ஸ், ரிமோட், அடாப்டர், ஏவி கார்டு ஆகியவற்றை உள்ளூர் அரசு கேபிள் டிவி ஆபரேட்டரிடம் திரும்ப ஒப்படைக்க வேண்டும். சந்தாதாரர் களிடம் இருந்து திரும்ப பெறும் செட்டாப் பாக்ஸ் உள்ளிட்டவற்றை, மாவட்ட அரசு கேபிள் டிவி நிறுவன அலுவலகத்தில் ஆபரேட்டர்கள் ஒப்படைக்க வேண்டும்.
தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனம் வழங்கிய செட்டாப் பாக்ஸ்களை பயன்படுத்தாமல், சந்தாதாரர்களிடம் தவறான விளம்பரங்களை செய்து தனியார் நிறுவன செட்டாப் பாக்ஸ்களை ஆபரேட்டர்கள் வழங்கி வரு கின்றனர்.
மேலும், கூடுதல் கட்டணம் வசூல் செய்வதாக புகார் வருகி றது. தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனத்துக்கு வருவாய் இழப்பீடு ஏற்படுத்துவது மற்றும் அரசு கேபிள் டிவி செட்டாப் பாக்ஸ் உள்ளிட்ட வற்றை திரும்ப ஒப்படைக்காத கேபிள் டிவி ஆபரேட்டர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப் படும்” என தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
சினிமா
12 mins ago
தமிழகம்
30 mins ago
க்ரைம்
37 mins ago
வணிகம்
41 mins ago
சினிமா
38 mins ago
கருத்துப் பேழை
1 hour ago
உலகம்
1 hour ago
வணிகம்
1 hour ago
இந்தியா
1 hour ago
இந்தியா
1 hour ago
இந்தியா
1 hour ago
இந்தியா
1 hour ago