வெள்ளம் பாதித்த கோயில்களை சுத்தப்படுத்திய முஸ்லிம்கள்

By சுனிதா சேகர்

சென்னையில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கோயிலை முஸ்லிம் தன்னார்வலர்கள் சுத்தம் செய்ததனர். அவர்களது செயல் காண்போரை மெய்சிலிர்க்க வைத்தது.

ஜம்மாத் இ இஸ்லாமி ஹிந்த் என்ற தன்னார்வ அமைப்பைச் சேர்ந்த 50க்கும் மேற்பட்டவர்கள் இந்த செயலில் ஈடுபட்டனர்.

கடந்த 2 நாட்களில் அவர்கள் கோட்டூர்புரம் மற்றும் சைதாப்பேட்டையில் இருவேறு கோயில்களையும் மசூதிகளையும் சுத்தம் செய்தனர். இந்த இடங்கள் அனைத்தும் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு சிதிலமடைந்த நிலையில் இருந்தன.

இந்த அமைப்பைச் சேர்ந்த முதுகலை பொறியியல் மாணவர் பீர் முகமது நம்மிடம் இது குறித்து கூறும்போது, "இந்துக்கள் கோயில்களுக்குள் சென்று வழிபாடு நடத்த முடியாத நிலையில் இருப்பதை பார்த்தோம். அதனால் அந்த கோயில்களை சுத்தம் செய்தோம். அந்த 2 கோயில்கள் இருந்த தெருக்களும் மிகவும் மோசமான நிலையில் நிவாரணம் சென்றடைய முடியாத சூழலில் இருந்தது.

நாங்கள் பணிகளில் ஈடுபட்டபோது அங்கிருந்த மக்களும் யார் எவரென்று பாராமல், உடன் வந்து உதவியது எங்களுக்கு மகிழ்ச்சி அளிப்பதாகவும் தூண்டுதலாகவும் இருந்தது.

வரும் வாரங்களில் மற்ற பகுதிகளுக்கும் சென்று அங்கிருக்கும் வழிபாட்டு தளங்களை சுத்தம் செய்ய உள்ளோம்." என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

1 hour ago

ஜோதிடம்

1 hour ago

விளையாட்டு

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

விளையாட்டு

9 hours ago

இந்தியா

9 hours ago

விளையாட்டு

10 hours ago

இந்தியா

11 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

12 hours ago

ஜோதிடம்

12 hours ago

மேலும்