சிறைக் கைதிகளுடன் வழக்கறிஞர்கள் தொலைபேசியில் பேச அனுமதி கோரி வழக்கு: அரசுக்கு உயர் நீதிமன்றம் நோட்டீஸ் 

By செய்திப்பிரிவு

சிறைக் கைதிகளுடன் தொலைபேசி அல்லது காணொலி மூலம் வழக்கறிஞர்கள் பேச அனுமதிக்கக் கோரிய வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சிறையில் உள்ள கைதிகளிடம் தொலைபேசி அல்லது காணொலி மூலம் வழக்கறிஞர்கள் பேச அனுமதிக்கக் கோரி கே.ஆர்.ராஜா என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது, தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் சண்முகசுந்தரம் ஆஜராகி, இதேபோன்று சென்னை உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து எடுத்த வழக்கில், மூத்த வழக்கறிஞர் வைத்த கோரிக்கை பரிசீலிக்க உத்தரவிடப்பட்டு தள்ளிவைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.

இதையடுத்து, இந்த வழக்கில் தமிழக அரசும், சிறைத் துறையும் பதிலளிக்க உத்தரவிட்ட நீதிபதிகள், சென்னை உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து எடுத்த வழக்கில் எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கை ஜூலை 1ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

31 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

சினிமா

2 hours ago

சினிமா

2 hours ago

சினிமா

2 hours ago

இணைப்பிதழ்கள்

8 hours ago

தமிழகம்

2 hours ago

சினிமா

2 hours ago

இணைப்பிதழ்கள்

8 hours ago

மேலும்