தமிழகத்தில் வெப்பச் சலனம் காரணமாக கடலோர மாவட்டங்கள், அதை ஒட்டிய உள் மாவட்டங்கள் உள்ளிட்ட சில மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
“வெப்பச் சலனம் காரணமாக ஜூன் 8, 9 ஆகிய தேதிகளில் தமிழ்நாட்டின் கடலோர மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய உள் மாவட்டங்கள், கன்னியாகுமரி, புதுவை காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
ஜூன் 10 முதல் 12 வரை தமிழ்நாடு, புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னையைப் பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 37 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 28 டிகிரி செல்சியஸை ஒட்டியிருக்கும்.
அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 36 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 28 டிகிரி செல்சியஸை ஒட்டியிருக்கும்.
கடந்த 24 மணி நேரத்தில் பெய்த அதிகபட்ச மழை அளவு
ஒய்.எம்.சி.ஏ நந்தனம் (சென்னை) 7 செ.மீ., அண்ணா பல்கலைக்கழகம் (சென்னை), பூந்தமல்லி (திருவள்ளூர்), சென்னை விமான நிலையம், கலவை (ராணிப்பேட்டை) சாய்ராம் கல்லூரி - மேற்கு தாம்பரம் (செங்கல்பட்டு) தலா 5 செ.மீ., ஸ்ரீபெரும்புதூர் (காஞ்சிபுரம்), அம்முந்தி (வேலூர்) தலா 4 செ.மீ., திருவாலங்காடு (திருவள்ளூர்) சோளிங்கர் (ராணிப்பேட்டை), வேலூர் தலா 3 செ.மீ., கோத்தகிரி (நீலகிரி), கொரட்டூர் (திருவள்ளூர்) தலா 2 செ.மீ., சென்னை நுங்கம்பாக்கம், விருதுநகர், சதியாறு (மதுரை) தலா 1 செ.மீ.
மீனவர்களுக்கான எச்சரிக்கை
ஜூன் 8 முதல் ஜூன் 12 வரை மன்னார் வளைகுடா பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.
ஜூன் 8 முதல் ஜூன் 10 வரை மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.
ஜூன் 8 முதல் 9 வரை மத்திய வங்கக் கடல் பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.
மீனவர்கள் மேற்குறிப்பிட்ட தேதிகளில் இப்பகுதிகளுக்கு எச்சரிக்கையுடன் செல்லுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
ஜூன் 10 அன்று மத்திய வங்கக் கடல் பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 50 முதல் 60 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.
ஜூன் 11 முதல் ஜூன் 12 வரை கேரளா, கர்நாடக கடலோரப் பகுதிகள் மற்றும் லட்சத் தீவு பகுதியில் பலத்த காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.
ஜூன் 8 முதல் முதல் ஜூன் 12 வரை தென்மேற்கு மற்றும் மத்திய தரைக்கடல் பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.
மேற்குறிப்பிட்ட தேதிகளில் அப்பகுதிக்குச் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள்”.
இவ்வாறு சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
7 mins ago
விளையாட்டு
9 mins ago
இந்தியா
27 mins ago
இந்தியா
16 mins ago
தமிழகம்
51 mins ago
ஓடிடி களம்
53 mins ago
விளையாட்டு
1 hour ago
சினிமா
1 hour ago
உலகம்
1 hour ago
விளையாட்டு
1 hour ago
ஜோதிடம்
1 hour ago
ஜோதிடம்
2 hours ago