ஸ்டாலின் முதல்வராக வேண்டி நாக்கை அறுத்து நேர்த்திக்கடன் செலுத்திய பெண்

By செய்திப்பிரிவு

சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக பெரும்பான்மை இடங்களில் வெற்றிபெற்று மு.க.ஸ்டாலின் முதல்வர் ஆகவுள்ளதையடுத்து, பரமக்குடியில் பெண் ஒருவர் தனது நாக்கை அறுத்து கோயிலில் நேர்த்திக் கடன் செலுத்தினார்.

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே பொதுவக்குடி கிராமத்தைச் சேர்ந்த கார்த்திக் என்பவரின் மனைவி வனிதா( 28). இவர் நேற்று காலை பரமக்குடி நகரில் உள்ள முத்தாலம்மன் கோயில் முன்பு நாக்கை அறுத்து நேர்த்திக் கடன் செலுத்தி மயங்கி விழுந்தார். அருகில் இருந்தவர்கள், அவரை மீட்டு பரமக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு நாக்கில் தையல் போடப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முதல்வரானால் நாக்கை அறுத்து நேர்த்திக்கடன் செலுத்துவதாக, அவர் வேண்டிக்கொண்டதாகவும், அதன்படி அவர் நேற்று நாக்கை அறுத்து நேர்த்திக் கடன் செலுத்தினார் என அருகில் இருந்தவர்கள் தெரிவித்தனர். கரோனா தடுப்பு நடவடிக்கையால் கோயில் மூடப்பட்டிருந்ததால் அவர் கோயிலின் வெளியே நின்று நாக்கை அறுத்து வீசியுள்ளார்.

அறுக்கப்பட்ட நாக்கின் சிறு துண்டும் அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. நாக்கை அறுத்து நேர்த்திக் கடன் செலுத்திய வனிதாவும், அவரது கணவர் கார்த்திக்கும் திமுக தொண்டர்கள். இவர்களுக்கு ஆண் மற்றும் பெண் குழந்தை உள்ளனர்.

கணவன், மனைவி இருவரும் கடந்த 2 ஆண்டுகளாகப் பிரிந்து வாழ்வது குறிப்பிடத்தக்கது. இச்சம்பவம் குறித்து பரமக்குடி நகர் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

14 mins ago

இந்தியா

47 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

ஜோதிடம்

1 hour ago

ஜோதிடம்

1 hour ago

ஜோதிடம்

2 hours ago

வாழ்வியல்

2 hours ago

ஜோதிடம்

2 hours ago

க்ரைம்

2 hours ago

இந்தியா

2 hours ago

சுற்றுலா

3 hours ago

மேலும்