கடலூர் அரசு மருத்துவமனையில் உயிரிழந்த கரோனா தொற்றாளர் உடல் மாற்றி அனுப்பப்பட்டுள்ளது.
புவனகிரி அருகே உள்ள ஆதி வராகநத்தம் பகுதியைச் சேர்ந்த 55 வயதுடைய ஒருவருக்கு கரோனா தொற்று ஏற்பட்டதால் கடந்த சில தினங்களுக்கு முன் கடலூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவர் நேற்று உயிரிழந்தார். உயிரிழந்தது குறித்து கடலூர் அரசு மருத்துவமனையில் இருந்து அவரது வீட்டுக்கு தகவல் தரப்பட்டது. இதனை தொடர்ந்து அவரது உறவினர்கள் உடலைப் பெற்று, அவரது சொந்த ஊரான ஆதிவராகநத்தம் பகுதி கொண்டு சென்றனர். அவர்களின் மதவழக்கப்படி புதைத்துள்ளனர்.
இந்நிலையில் கடலூர் கரோனா வார்டில் உள்ள மருத்துவ அதிகா ரிகள் உயிரிழந்தவரின் வீட்டுக்கு போன்செய்து, அவரது உடலை எடுத்து செல்லுமாறு கூறியுள்ளார். அதிர்ச்சியடைந்த அவரது குடும் பத்தினர் இது குறித்து கடலூர் அரசு மருத்துவமனைக்கு சென்று விசாரணை செய்தனர். இதில் மருத்துவமனையிலிருந்து உடலை மாற்றி அனுப்பியது தெரிந்தது. அதாவது கரோனா வார்டில் உயிரிழந்த பண்ருட்டி அருகே உள்ள புதுப்பேட்டை பகுதியைச் சேர்ந்த மற்றொருவரின் உடல் மாற்றி அனுப்பி வைத்தது தெரிய வந்தது. இதையடுத்து உரிய நபரின் உடலை அவரது உறவி னர்கள் பெற்று அவரது சொந்த ஊரில் புதைத்தனர்.
இதனை தொடர்ந்து நேற்றுமாலை புவனகிரி வட்டாட்சியர் அன்பழகன் முன்னிலையில் புவன கிரி போலீஸார், கிருஷ்ணாபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலைய அதிகாரிகள் கொண்ட குழுவினர் புதைக்கப்பட்ட மற்றொரு நபரின் உடலை தோண்டி எடுத்து அவரது சொந்த ஊரான புதுப்பேட்டைக்கு அனுப்பி வைத்தனர். கடலூர் அரசு மருத்துவமனையில் உயிரி ழந்த கரோனா நோயாளி உடல் மாற்றி அனுப்பிய சம்பவம் கடலூர் மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
முக்கிய செய்திகள்
இந்தியா
4 mins ago
தமிழகம்
17 mins ago
இந்தியா
35 mins ago
ஜோதிடம்
10 mins ago
இந்தியா
1 hour ago
ஜோதிடம்
1 hour ago
ஜோதிடம்
2 hours ago
இந்தியா
2 hours ago
இந்தியா
2 hours ago
இந்தியா
2 hours ago
இந்தியா
3 hours ago
வணிகம்
3 hours ago