தமிழகம்

பாமக 3வது பட்டியல் வெளியீடு: எஞ்சிய 4 தொகுதிகளுக்கும் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டனர்

செய்திப்பிரிவு

பாமக 3வது வேட்பாளார் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. ஏற்னெகவே 19 வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்ட நிலையில் மொத்தம் ஒதுக்கப்பட்ட 23 தொகுதிகளில் எஞ்சிய 4 தொகுதிகளுக்கான வேட்பாளர்களும் இன்று அறிவிக்கப்பட்டனர்.

மேட்டூரில் எஸ். சதாசிவம் (பாமகமாநிலத் துணைத் தலைவர்), பூந்தமல்லி (தனி) தொகுதியில் முன்னாள் எம்எல்ஏ எஸ்.எக்ஸ் ராஜமன்னார், சங்கராபுரம் தொகுதியில் மருத்துவர். ராஜா, (மாவட்ட மருத்துவர் அணி செயலாளர்), வந்தவாசி (தனி) தொகுதியில் எஸ். முரளி சங்கர், (மாநில மாணவர் சங்க செயலாளர்) ஆகியோர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.

பாமக தலைவர் ஜி.கே.மணி இந்த அறிவிப்பை வெளியிட்டார்.

முன்னதாக, பூந்தமல்லி தொகுதியை பாமகவுக்கு ஒதுக்கியதை எதிர்த்து அதிமுகவினர் சாலைமறியல் உள்ளிட்ட பல்வேறு போராட்டங்களை நடத்தினர். இந்நிலையில் பூந்தமல்லி தொகுதிக்கு பாமக சார்பில் வேட்பாளர் அறிவிக்கப்பட்டுள்ளார். இத்தொகுதியில் திமுக வேட்பாளர் களம் இறங்குகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT