பறவாக்கோட்டை சின்ன ஆண்டவன் சுவாமிகள் சென்னை விஜயம் (பட்டினப் பிரவேசம்) செய்து குரோம்பேட்டை அருகே திருநீர்மலையில் உள்ள ஆசிரமத்தில் எழுந்தருளியுள்ளார்.
ரங்கத்தில் உள்ள பவுண்டரீகபுரம் மத் ஆண்டவன் ஆசிரமத்தில் 10-வது ஆச்சார்யனாக எழுந்தருளியிருக்கும் பறவாக்கோட்டை சின்ன ஆண்டவன் பரமஹம்ஸேத்யாதி நிவாஸ கோபால மஹா தேசிகன் சுவாமிகள் ஸஞ்சாரமாக, நேற்று சென்னை குரோம்பேட்டை அருகேதிருநீர்மலையில் உள்ள ஆஸ்ரமத்தில் எழுந்தருளியுள்ளார்.
நிவாஸப் பெருமாள் சந்நிதியில் தங்கி, முநித்ரய சம்ப்ரதாய ப்ரவர்த்தகர் திருக்குடந்தை தேசிகனால் ஆராதிக்கப்பட்ட லட்சுமி ஹயக்ரீவனுக்கும் மற்றபெருமாள்களுக்கும் தனுர் மாத ஆராதனம் செய்கிறார். அதேபோல் வரும்15-ம் தேதி பகல் பத்தும், 24-ம் தேதி இராப்பத்து உற்சவங்களும் நடைபெறவுள்ளன.
இதைத் தொடர்ந்து வரும் 25-ம் தேதி வைகுண்ட ஏகாதசியும், அடுத்தடுத்த நாட்களில் நம்மாழ்வார் திருவடி தொழில்,இயற்பா சாற்றுமுறை, தேசிக பிரபந்த சாற்றுமுறையும் நடைபெற உள்ளன.
பெரிய பறவாக்கோட்டை ஆண்டவன் கோபால தேசிக மஹா தேசிகனின் நூற்றாண்டை முன்னிட்டு, வரும் 28-ம்தேதி, மார்கழி மாத ரோஹிணி திருநட்சத்திரம் வெகு விமரிசையாக நடைபெற உள்ளது. தினமும் மாலை 6.30 முதல் 7.30 மணி வரை குரோம்பேட்டை, அஸ்தினாபுரம் மாருதி நகரில் உள்ள ராம ஆஞ்சநேயர் கோயிலில், ’கோதை தமிழ்’என்ற தலைப்பில் திருப்பாவை உபன்யாசமும் நிகழ்த்த உள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
இந்தியா
13 mins ago
வணிகம்
8 hours ago
சுற்றுச்சூழல்
50 mins ago
சுற்றுலா
1 hour ago
கல்வி
19 mins ago
தமிழகம்
1 hour ago
சுற்றுலா
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
இந்தியா
2 hours ago
ஆன்மிகம்
3 hours ago