மலை ரயிலுக்கு இன்று வயது 112

By செய்திப்பிரிவு

நீலகிரியில் 112-வது மலை ரயில் தினம் இன்று கொண்டாடப்படுகிறது.

நீலகிரி மாவட்ட சுற்றுலாவில் முக்கிய அங்கம் வகிப்பது மலை ரயில். இந்தியாவிலேயே பல் சக்கரம் கொண்ட ஒரே ரயில் பாதை,கடந்த 1898-ம் ஆண்டு மேட்டுபாளையத்திலிருந்து குன்னூர் வரை நிறுவப்பட்டது. பின்னர் 1908-ம் ஆண்டு உதகை வரை இப்பாதை நீட்டிக்கப்பட்டது. நூற்றாண்டைக் கடந்த மலை ரயிலுக்கு,கடந்த 2004-ம் ஆண்டு ‘யுனெஸ்கோ’ நிறுவனத்தின் பாரம்பரிய அந்தஸ்து வழங்கப்பட்டது.

குன்னூர்- மேட்டுப்பாளையம் இடையே 16 முதல் வகுப்பு, 92 இரண்டாம் வகுப்பு முன்பதிவு இருக்கைகள், 30 சாதாரண இருக்கைகளை உள்ளடக்கிய மூன்று பெட்டிகளுடன், நீராவி இன்ஜினில் ரயில் இயக்கப்படுகிறது. குன்னூர் - உதகை இடையே 16 முதல் வகுப்பு, 19 இரண்டாம் வகுப்பு முன்பதிவு இருக்கைகள், 150 சாதாரண இருக்கைகளை உள்ளடக்கிய 5 பெட்டிகளுடன் டீசல் இன்ஜினுடன் ரயில்இயக்கப்படுகிறது. இந்த ரயிலில் பயணிக்க உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் பெரிதும் ஆர்வம் காட்டுவர்.

கரோனாவால் சேவை நிறுத்தம்

இந்நிலையில், கரோனா வைரஸ் பரவல் அச்சுறுத்தல் காரணமாககடந்த மார்ச் மாதம் 20-ம்தேதிமுதல் மலை ரயில் சேவை நிறுத்தப்பட்டது. கடந்த 10-ம் தேதி முதல்தொடங்க விருந்த மலை ரயில் சேவை, நிர்வாக காரணங்களால்ஒத்தி வைக்கப்பட்டது. இது சுற்றுலாப்பயணிகளிடையே பெரும் ஏமாற்றத்தை அளித்துள்ளது. இன்று மலை ரயில் சேவை 112-வது ஆண்டைக் கொண்டாட உள்ளதால், குன்னூரில் நிறுத்தப்பட்டுள்ள ரயிலை சுத்தப்படுத்தும்பணியில் ஊழியர்கள் நேற்று ஈடுபட்டனர். மலை ரயில் சேவையை விரைந்து தொடங்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சுற்றுலாப் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சுற்றுலா

15 mins ago

தமிழகம்

34 mins ago

தமிழகம்

51 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

2 hours ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

3 hours ago

இந்தியா

3 hours ago

விளையாட்டு

3 hours ago

தமிழகம்

3 hours ago

இந்தியா

4 hours ago

மேலும்