பிற்படுத்தப்பட்ட சிறு, குறு விவசாயிகளுக்கு ஆழ்துளை கிணறு அமைக்க 50 சதவீத மானியத்தில் கடன்

By செய்திப்பிரிவு

திருவள்ளூர் மாவட்டத்தில் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் வகுப்பைச் சேர்ந்த சிறு, குறு விவசாயிகள் ஆழ்துளை கிணறு அமைக்க 50 சதவீத மானியத்துடன் கடன் பெறலாம் என ஆட்சியர் மகேஸ்வரி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து, திருவள்ளூர் ஆட்சியர் அலுவலகம் வெளி யிட்டுள்ள செய்திக்குறிப்பு:

தமிழ்நாடு பிற்படுத்தப் பட்டோர் பொருளாதார மேம் பாட்டு கழகம் மூலம் பொரு ளாதாரத்தில் பின்தங்கியுள்ள பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் வகுப்பைச் சேர்ந்த சிறு, குறு விவசாயிகளுக்கு ஆழ்துளை கிணறு அமைக்க 50 சதவீத மானியத்துடன் கடன் வழங்கும் திட்டம் செயல் படுத்தப்பட்டு வருகிறது.

இதற்கு அதிகபட்சம் ஒரு லட்சம் ரூபாய் வங்கிக்கடன் மற்றும் 50 சதவீதம் அரசு மானியம் அதிகபட்சமாக ரூ.50 ஆயிரம் வரை வழங்கப்படும்.

இதில் பயன்பெற விரும்பு வோர் சாதிச் சான்று, வருமானச் சான்று, இருப்பிடச் சான்று, வட்டாட்சியரிடம் இருந்து பெறப்பட்ட சிறு, குறு விவசாயி என்பதற்கான சான்று, கணினி வழி பட்டா, அடங்கல் நகல் ஆகியவற் றுடன் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப் பட்டோர் மற்றும் சிறுபான்மை யினர் நல அலுவலகத்தை அணுகி பயன்பெறலாம்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தொழில்நுட்பம்

29 mins ago

சினிமா

1 hour ago

க்ரைம்

1 hour ago

விளையாட்டு

2 hours ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

இந்தியா

2 hours ago

க்ரைம்

3 hours ago

சுற்றுச்சூழல்

3 hours ago

இந்தியா

3 hours ago

சினிமா

3 hours ago

மேலும்