முழு ஊரடங்கை மீறிய கடைகள் மீது நடவடிக்கை

By செய்திப்பிரிவு

கரோனா தடுப்பு நடவடிக்கையாக தமிழக அரசு ஜூலை மாதம் முழுவதும் அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளிலும் தளர்வு இல்லாத முழு ஊரடங்குஅமல்படுத்தப்படும் என அறிவித்தது. இதன்படி, ஞாயிற்றுக்கிழமைகளில் கடைகள் அனைத்தும் மூடப்பட்டு ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், காஞ்சிபுரம் நகரில் காந்திசாலை, தேரடி, காமராஜர் சாலை, மூங்கில் மண்டபம், ராஜாஜி சாலை, பேருந்துநிலையம், பூக்கடை சத்திரம் ஆகிய பகுதிகளில் கடைகள் மூடப்பட்டிருந்ததால் மக்கள் நடமாட்டம் இல்லாமல் சாலைகள்வெறிச்சோடி காணப்பட்டன.

எனினும், ஒரு சில பகுதிகளில் கடைகள் வழக்கம்போல் திறந்திருந்ததால் நகராட்சி அதிகாரிகள் அவற்றை அடைத்தனர். இதேபோல், விதிகளைமீறி செயல்பட்ட பெட்ரோல் பங்குகளையும் மூடினர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

15 mins ago

தமிழகம்

3 mins ago

தமிழகம்

19 mins ago

இந்தியா

43 mins ago

விளையாட்டு

1 hour ago

விளையாட்டு

1 hour ago

தமிழகம்

1 hour ago

உலகம்

2 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

3 hours ago

கருத்துப் பேழை

5 hours ago

மேலும்