செங்கை, காஞ்சி, திருவள்ளூர் மாவட்டங்களில் கரோனாவால் இதுவரை 287 பேர் உயிரிழப்பு

By செய்திப்பிரிவு

செங்கை, காஞ்சி, திருவள்ளூர் மாவட்டங்களில் இதுவரை 287பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர்.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் கரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 2,834 ஆக இருந்தது. நேற்று மேலும் 136 பேருக்கு தொற்றுஏற்பட்டது. இதைத் தொடர்ந்து கரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 2,970 ஆக உயர்ந்தது. 38 பேர் உயிரிழந்துள்ளனர்.

செங்கல்பட்டு மாவட்டத்தில் கரோனா பாதிப்பு 6,938 ஆக இருந்தது. நேற்று வந்த பரிசோதனை முடிவுகளில் மேலும் 277 பேருக்குபெருந்தொற்று பாதிப்பு உறுதியானது. இதனால் இம்மாவட்டத்தில் பாதிப்பு எண்ணிக்கை 7,215 ஆக உயர்ந்தது. இவர்களில் 138 பேர் உயிரிழந்துள்ளனர்.

திருவள்ளூர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை 5,199பேர் பெருந்தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தனர். நேற்று வெளிவந்தபரிசோதனை முடிவுகளில் திருவள்ளூர் தாலுகா காவல் நிலையத்தில் 2 பேர், பெரியபாளையம் காவல் நிலையத்தில் ஒருவர் உட்பட 308 பேருக்கு பாதிப்புஉறுதியானது. எனவே இங்கு பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 5,507 ஆக உயர்ந்துள்ளது. 111 பேர் உயிரிழந்துள்ளனர்.

திருவண்ணாமலை மாவட்டத்தில் ஏற்கெனவே 2,634 பேர் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் நேற்று 55 பேருக்கு புதிதாக தொற்று உறுதி செய்யப்பட்டது. இதன் மூலம் இம்மாவட்டத்தில் பாதிப்பு2,689 ஆக அதிகரித்துள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

12 mins ago

விளையாட்டு

47 mins ago

வணிகம்

59 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

ஓடிடி களம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

வணிகம்

2 hours ago

தமிழகம்

42 mins ago

இந்தியா

2 hours ago

தமிழகம்

1 hour ago

விளையாட்டு

2 hours ago

மேலும்