கோழி, முட்டையால் கோவிட்-19 வைரஸ் பரவுவதாக வதந்தி; பாதிப்பு ஏற்படுவதாக நிரூபித்தால் ரூ.1 கோடி: முட்டைக்கோழி பண்ணையாளர்கள் சம்மேளனம் அறிவிப்பு

By செய்திப்பிரிவு

நாமக்கல்லில் தமிழ்நாடு கோழிப்பண்ணையாளர்கள் சம்மேளனம், தமிழ்நாடு முட்டைக்கோழிப் பண்ணையாளர்கள் மார்க்கெட்டிங் சொசைட்டி சார்பில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பங்கேற்ற தமிழ்நாடு முட்டைக்கோழி பண்ணையாளர்கள் சம்மேளன துணைத் தலைவர் வாங்கிலி சுப்ரமணியம் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

கோழி இறைச்சி, முட்டை சாப்பிடுவதால் கோவிட்-19 பாதிப்பு ஏற்படுவதாக சமூக வலைதளங்களில் வதந்தி பரப்பி விடப்படுகிறது. இதனால், கிலோ ரூ.80-க்கு விற்பனையான கறிக்கோழி ரூ.10-க்கு வந்துவிட்டது.

வதந்தி பரப்புவோர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்த உள்ளோம். மேலும், கோழி இறைச்சி, முட்டை சாப்பிடுவதால் கோவிட்-19 பாதிப்பு ஏற்படாது என அரசு சார்பில் விளம்பரம் செய்யும்படி வலியுறுத்த உள்ளோம்.

கோழி இறைச்சி, முட்டை சாப்பிட்டால் கோவிட்-19 பாதிப்பு ஏற்படும் என்பதை நிரூபித்தால் தமிழ்நாடு முட்டைக்கோழி பண்ணையாளர்கள் மார்க்கெட்டிங் சொசைட்டி சார்பில் ரூ.1 கோடி பரிசு வழங்கப்படும்.

கோவிட்-19 வதந்தி காரணமாக 15 கோடி முட்டை தேங்கியுள்ளது. கடந்த ஒரு வாரத்தில் மட்டும் கறிக்கோழி விற்பனை 15 கோடி ரூபாய் வரையும், நாள்தோறும் முட்டைக் கோழிப்பண்ணையாளர்களுக்கு ரூ.8 கோடியும் இழப்பு ஏற்படுகிறது. கடந்த 2 வாரங்களில் ரூ.500 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

27 mins ago

இந்தியா

25 mins ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

வணிகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

உலகம்

3 hours ago

வணிகம்

3 hours ago

சினிமா

3 hours ago

மேலும்