ஆந்திர மாநிலம் சித்தூர் அருகே இன்று அதிகாலை ஏற்பட்ட சாலை விபத்தில் சிக்கி தமிழகத்தைச் சேர்ந்த ஒரு குழந்தை உள்பட 3 பேர் பலியாகினர். 6 பேர் படுகாயமடைந்தனர்.
கோவை மாவட்டம் பொள்ளாச்சியைச் சேர்ந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் காரில் திருப்பதிக்கு சென்றுவிட்டு திரும்பிக் கொண்டிருந்தனர். அவர்களது வாகன அதிகாலை 4.30 மணியளவில் சித்தூர் அருகே வந்தபோது மரத்தில் மோதி விபத்துக்குள்ளானது.
விபத்தில் 3 பேர் பலியாகினர். பலியானவர்கள் சுப்பிரமணியன் (45), ருக்மணி (30), யோகேஸ்வரி (1) என அடையாளம் காணப்பட்டுள்ளது. காயமடைந்த 2 பெண்கள் உள்பட 6 பேர் திருப்பதி எஸ்.வி.ஆர்.ஆர். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.