ஐ.பி.எஸ். அதிகாரிகள் 9 பேர் இடமாற்றம்

தமிழகத்தில் ஐபிஎஸ் அதிகாரிகள் 9 பேர் இடமாற்றம் செய்யப் பட்டுள்ளனர். கோவை சரகத்துக்கு புதிய டி.ஐ.ஜியாக ஆயுஷ் மணிதிவாரி நியமிக்கப்பட் டுள்ளார்.

மத்திய அரசு பணியில் இருந்த ஐ.பி.எஸ். அதிகாரி ஆயுஷ் மணிதிவாரி, தமிழ்நாடு மாநில பணிக்கு திரும்பியுள்ளார். அவர் கோவை சரக போலீஸ் டி.ஐ.ஜி ஆக நியமிக்கப்பட்டுள்ளார்.

திருநெல்வேலி மாவட்டத்தில் பயிற்சி உதவி போலீஸ் சூப்பிரண் டாக இருந்த பி.அருண் சக்திகுமார், தூத்துக்குடி சப் டிவிஷன் உதவி சூப்பிரண்டாகவும், மதுரை மாவட்ட பயிற்சி உதவி சூப்பிரண்டாக இருந்த தேஷ்முக் சேகர் சஞ்சய், தர்மபுரி மாவட்டத்தில் உள்ள அரூர் சப் டிவிஷன் உதவி போலீஸ் சூப்பிரண்டாகவும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

நாகப்பட்டினம் மாவட்ட பயிற்சி உதவி போலீஸ் சூப்பிரண் டாக இருந்த எஸ்.தீபா கனிகர் புதுக்கோட்டை சப் டிவிசன் உதவி சூப்பிரண்டாகவும், திண்டுக் கல் மாவட்டத்தில் பயிற்சி உதவி சூப்பிரண்டாக இருந்த ஜி.ஷசாங்சாய், நாகப்பட்டி னம் சப் டிவிஷன் உதவி சூப்பிரண் டாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

திருச்சி மாவட்ட பயிற்சி உதவி சூப்பிரண்டாக இருந்த ஜார்ஜ், செங்கல்பட்டு சப் டிவிஷன் உதவி சூப்பிரண்டாகவும், தஞ்சாவூர் மாவட்டத்தில் பயிற்சி உதவி சூப்பிரண்டாக இருந்த ஓம்பிரகாஷ் மீனா, ஊமச்சி குளம் சப் டிவிஷன் உதவி சூப்பிரண்டாகவும் நியமிக்கப்பட் டுள்ளனர்.

சிவகங்கை மாவட்டத்தில் பயிற்சி உதவி போலீஸ் சூப்பி ரண்டாக இருந்த ரோகிணி பிரிய தர்ஷினி. ஓசூர் உதவி சூப்பிரண்டா கவும், காஞ்சிபுரம் மாவட்டத்தில் பயிற்சி உதவி சூப்பிரண்டாக இருந்த விக்ராந்த் பட்டீல், தக்கலை உதவி சூப்பிரண்டாகவும் பணி நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

இதற்கான உத்தரவை உள்துறை செயலர் அபூர்வ வர்மா பிறப்பித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE