‘பாஜகவுக்கு சாதகமாக தேர்தல் ஆணையம்’ - துரை வைகோ

By செய்திப்பிரிவு

திருச்சி தொகுதி மதிமுக வேட்பாளரும், அக்கட்சியின் முதன்மைச் செயலாளருமான துரை வைகோ நேற்று செய்தியாளர்களிடம் கூறியது: எங்களுக்கு பம்பரம் சின்னம் ஒதுக்க முடியாது என தேர்தல் ஆணையம் கூறியுள்ளது.

ஆனால், நீதிமன்றம் அளிக்கும் தீர்ப்புதான் இறுதியானது. பம்பரம் சின்னம் இல்லையென்றாலும் புதிய சின்னத்தில் போட்டியிடுவோம். தமாகா, அமமுக ஆகிய கட்சிகளுக்கு உடனே சின்னம் ஒதுக்கிய தேர்தல் ஆணையம் எங்களுக்கு சின்னம் ஒதுக்க 2 மாதங்களாக இழுத்தடித்து வருகின்றனர்.

ஒரு தொகுதிக்கு மேல் போட்டியிட்டால்தான் அவர்கள் கேட்கும் சின்னத்தை வழங்க முடியும் என கூறும் தேர்தல் ஆணையம், தமிழகத்தில் 2 தொகுதிகளில் போட்டியிடும் விசிகவுக்கு அவர்கள் கேட்கும் பானை சின்னத்தை இதுவரை வழங்காதது ஏன்? அனைத்து தொகுதிகளிலும் போட்டியிடும் நாம் தமிழர் கட்சிக்கும் அவர்கள் கேட்கும் சின்னத்தை வழங்கவில்லை. தேர்தல் ஆணையம் முழுக்க முழுக்க பாஜகவுக்கு சாதகமாக செயல்படுகிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

26 secs ago

இந்தியா

11 mins ago

உலகம்

9 mins ago

இந்தியா

18 mins ago

இந்தியா

23 mins ago

இந்தியா

19 mins ago

இந்தியா

30 mins ago

இந்தியா

34 mins ago

கருத்துப் பேழை

41 mins ago

கருத்துப் பேழை

44 mins ago

ஜோதிடம்

3 hours ago

ஜோதிடம்

3 hours ago

மேலும்