“இழந்த செல்வாக்கை மீட்டெடுப்போம்” - தேமுதிக அவைத் தலைவர் வி.இளங்கோவன் நேர்காணல்

By சி.பிரதாப்

தொடர் தோல்வி, விஜயகாந்த் மறைவு என இக்கட்டான சூழலில் வரும் தேர்தலை எப்படி எதிர்கொள்ள போகிறீர்கள்? - 2011-க்கு பிறகு தேர்தல்களில் தேமுதிகவுக்கு சற்று பின்னடைவு ஏற்பட்டது. அதேநேரம், விஜயகாந்த்துக்கு வாய்ப்பு வழங்கியிருந்தால் சிறந்த மாற்றத்தை தந்திருப்பார் என்ற எண்ணம் மக்களிடம் பரவலாக காணப்படுகிறது. அதற்கு இன்றளவும் அவரின் நினைவிடத்துக்கு வரும் மக்கள் கூட்டமே சாட்சி.

தேமுதிக-அதிமுக கூட்டணி எந்த நிலையில் உள்ளது? தாமதம் ஏன்? - தாமதமில்லை. இருகட்ட பேச்சுவார்த்தைகள் சிறப்பாக நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. 3-ம் கட்ட பேச்சுவார்த்தையில் தொகுதி பங்கீடு இறுதி செய்யப்படும். அதிமுக - தேமுதிக கூட்டணி மக்கள் விரும்பும் ஒன்றாக இருக்கும்.

அதிமுகவுடன் பேசும்போதே பாஜவுடனும் பேசுவதாக தகவல்கள் வருகிறதே? - இதுதவறான தகவல்கள். அடிப்படை ஆதாரமின்றி செய்திகளை வெளியிடக் கூடாது. தற்போது வரை அதிமுகவுடன் மட்டுமே பேசி வருகிறோம்.

பாஜக-தேமுதிக கூட்டணி இருக்காது என உறுதியாக கூறமுடியுமா? - பாஜகவுடன் பேசவில்லை என எங்கள் பொதுச் செயலாளரே தெளிவுபடுத்திவிட்டார்.

மக்களவைத் தேர்தல் தேமுதிகவுக்கு ஏறுமுகமா அமையுமா? - இந்த தேர்தலில் இழந்த செல்வாக்கை தேமுதிக மீண்டும் பெறும். அதற்காகவே வியூகங்கள் வகுக்கப்பட்டு செயல்படுத்தப்பட உள்ளன.

பொதுச்செயலாளராக பிரேமலதாவின் செயல்பாடுகள் எவ்வாறு உள்ளன? - தலைவர் இல்லாத குறையை போக்கும் விதமாக தொண்டர்கள், நிர்வாகிகள் உட்பட அனைத்து தரப்பினரையும் அரவணைத்து வழிநடத்துகிறார். கட்சி பணிகளில் தன்னலமின்றி செயல்படுகிறார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

8 mins ago

சினிமா

42 mins ago

தமிழகம்

50 mins ago

இந்தியா

1 hour ago

விளையாட்டு

1 hour ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

சினிமா

1 hour ago

உலகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

மேலும்