ஆயிரம் பேருந்து வழித்தடங்களை அமைச்சர்கள் வாங்கியதாக கூறுவது ஆதாரமற்ற தகவல் என துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.
கோவை விமானநிலையத்தில் துணை முதல்வர் ஓபிஎஸ் மேலும் கூறியது:
கர்நாடகாவிடம் காவிர் நீர் கேட்பது நமது உரிமை. நடுவர் மன்றத் தீர்ப்பின்படி தண்ணீர் கொடுப்பது கர்நாடக அரசின் கடமை. தமிழக அரசின் சில திட்டங்களுக்கு மத்திய அரசு போதிய நிதி ஒதுக்குவதில்லை. தற்போதுள்ள மத்திய அரசு தமிழகத்துக்கு முழுமையான நிதி வழங்கும் என எதிர்பார்க்கிறோம் என்றார்.