பாஜகவில் இணைவதாக வதந்தி: பழைய பதிவை பகிர்ந்து மாஃபா பாண்டியராஜன் விளக்கம்

By செய்திப்பிரிவு

சென்னை: அதிமுக முன்னாள் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் பாஜகவில் இணையவுள்ளதாக தகவல் பரவிய நிலையில் அதனை மறுத்துள்ளார்.

மேலும், அதிமுக முன்னாள் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தனது எக்ஸ் தள பக்கத்தில் "என்றும் புரட்சித்தலைவி அம்மா வழியில், கழகப் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் கழகப் பணியாற்றுவேன், உறுதியுடன்! உண்மையுடன்!" என்று பதிவிட்டு தனது பழைய பதிவை மீண்டும் பகிர்ந்துள்ளார்.

3 வருடங்களுக்கு முன் பதிந்த அந்த பழைய பதிவில், "என் இறுதி மூச்சு உள்ளவரை அஇஅதிமுக மூலம் பொதுவாழ்வில் பங்களிப்பேன்" என்பதை தெளிவு படுத்துகிறேன் என்று அவர் பதிவிட்டுள்ளார்.

மக்களவை தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ள நிலையில் தமிழகத்தில் அரசியல் பிரதிநிதிகள் கட்சிகள் மாறிவருகின்றனர். அந்தவகையில் சமீபத்தில் காங்கிரஸ் எம்எல்ஏ விஜயதாரணி பாஜகவில் சேர்ந்தார். தொடர்ந்து சில அரசியல் பிரமுகர்கள் கட்சி மாறப்போவதாக தகவல் வெளியாகி வரும் நிலையில், தன் மீதான வதந்தி குறித்து மாஃபா பாண்டியராஜன் விளக்கம் அளித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

10 mins ago

விளையாட்டு

27 mins ago

தமிழகம்

43 mins ago

தமிழகம்

46 mins ago

சினிமா

1 hour ago

இந்தியா

1 hour ago

வணிகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

சினிமா

1 hour ago

விளையாட்டு

1 hour ago

தமிழகம்

2 hours ago

மேலும்