புதுக்கோட்டை: மோசடி உள்ளிட்ட புகார்களால், நல்லாசிரியர் விருது பெற்ற புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அரசு நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசல் கிராமத்தை சேர்ந்தவர் ஆ.கருப்பையன். இவர் ஆலங்குடி அரசு நடுநிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியராக பணிபுரிந்து வந்தார். இவர், அரசு அலுவலர்களின் கையெழுத்தை போலியாக இட்டு வங்கியில் கடன் பெற்று திருப்பிச் செலுத்தாமல் மோசடி செய்துள்ளார்.
அதோடு மேலும் சில மோசடி புகார்களும் இருந்ததாக கூறப்படுகிறது. இதனிடையே, தலைமை ஆசிரியர் கருப்பையனை பணியிடை நீக்கம் செய்து அறந்தாங்கி மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் கூ.சண்முகம் இன்று ( ஜன.31 ) உத்தரவிட்டார். தலைமை ஆசிரியர் கருப்பையன் 2010-ல் தேசிய நல்லாசிரியர் விருது பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
3 mins ago
கல்வி
18 mins ago
சுற்றுச்சூழல்
20 mins ago
தமிழகம்
48 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
இந்தியா
2 hours ago
சுற்றுச்சூழல்
1 hour ago
சினிமா
2 hours ago
தமிழகம்
2 hours ago
இந்தியா
3 hours ago