டிஎன்பிஎஸ்சி குரூப்-2 மறுதேர்வு கோரி ஆர்ப்பாட்டம்: கடலூரில் நடந்தது

By செய்திப்பிரிவு

ஜூன் 29-ம் தேதி நடந்த டிஎன் பிஎஸ்சி குரூப் 2 தேர்வு குறித்த வினாத்தாள் முன்கூட்டியே வெளி யாகியிருப்பதாக செய்திகள் வந்துள்ளதால், மறுதேர்வு நடத்த வேண்டும் என தேர்வு எழுதியவர்கள் கடலூர் ஆட்சியர் அலுவலகம் எதிரே செவ்வாய்க்கிழமை ஆர்ப் பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஜூன் 29-ம் தேதி நடைபெற்ற டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வை சுமார் 5 லட்சம் பேர் எழுதினர். கடலூர் மாவட்டத்தில் 19 ஆயிரம் பேர் எழுதினர். இந்நிலையில் கட லூர் திருவந்திபுரத்தில் தேர்வு எழுதிய ஒருவர் திருப்பாதிரிபுலியூர் ரயில் நிலையம் அருகே கீழே கிடந்த துண்டுச் சீட்டை எடுத்து பார்த்தபோது, அதில் குரூப் 2 தேர்வு பொதுத் தமிழ் பாடப்பிரிவு வினாக் களுக்குரிய விடைகள் இருந் தன. அதைப்பார்த்து அவர் அதிர்ச்சி யடைந்தார். தேர்வு முடிந்த சிறிது நேரத்தில் விடைகள் எழுதப்பட்ட துண்டுச் சீட்டு சிக்கியது சந்தேகத்தை ஏற்படுத்தியது.

இந்நிலையில் கடலூரில் குரூப் 2 தேர்வு எழுதிய மாணவர்கள் 100 பேர் செவ்வாய்க்கிழமை காலை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் அவர்கள் மாவட்ட வரு வாய் அதிகாரி மனோகரிடம் ஒரு மனு கொடுத்தனர். அதில், ஜூன் 29-ம் தேதி நடந்த குரூப்-2 தேர்வு வினாத்தாள் வெளியானதாக பரபரப்பாக பேசப்படுகிறது. இத னால் நாங்கள் மிகுந்த மன உளைச் சலுக்கு ஆளாகி உள்ளோம்.

2012-ம் ஆண்டு இதேபோன்று குரூப்-2 தேர்வு வினாக்களுக்குரிய விடைத்தாள் கிடந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து அந்த தேர்வு ரத்து செய்யப்பட்டது. அதேபோன்று இந்த தேர்வையும் ரத்து செய்ய உத்தரவிட வேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

8 mins ago

விளையாட்டு

26 mins ago

இந்தியா

52 mins ago

விளையாட்டு

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

உலகம்

2 hours ago

ஆன்மிகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

இந்தியா

3 hours ago

தமிழகம்

3 hours ago

மேலும்