உலகிலேயே குடும்ப கட்டமைப்புக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கும் நாடுகளில் இந்தியா முன்னிலை வகிக்கிறது. அந்த வகையில் குடும்பத்துக்கு அச்சாணியாக விளங்கும் திருமணங்களை இந்தியர்கள் வெகு விமரிசையாக செய்கின்றனர். இந்தியாவில் ஆண்டுதோறும் 1 கோடிக்கும் அதிகமான திருமணங்கள் நடைபெற்றாலும், நவம்பர்-டிசம்பர் காலகட்டத்தில்தான் அதிகப்படியான திருமணங்கள் நடைபெறுவதாக புள்ளிவிவரங்கள் கூறுகின்றன. அந்த வகையில் இந்த ஆண்டு வரும் நவம்பர் 23 முதல் டிசம்பர் 15 வரை கல்யாண சீசன் கொடிகட்டி பறக்க உள்ளது. இந்த 23 நாட்களில் நாடு முழுவதும் சுமார் 35 லட்சம் திருமணங்கள் நடைபெற உள்ளதாக அனைத்து இந்திய வர்த்தகர்கள் கூட்டமைப்பு (சிஏஐடி) நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.
இந்த சூழ்நிலையில், ராஜஸ்தான் சட்டப்பேரவைத் தேர்தல் நவம்பர் 23-ம் தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது. ஆனால், அந்த தேதியில் அதிகப்படியான திருமணம் நடைபெற இருப்பதாக பல்வேறு அரசியல் கட்சிகளும் சமூக அமைப்புகளும் சுட்டிக்காட்டியதால் அந்த தேர்தலை தேர்தல் ஆணையம் 25-ம் தேதிக்கு மாற்றி அமைத்தது. இந்த சீசனில் மட்டும் திருமண வீட்டார் சுமார் ரூ.4.25 லட்சம் கோடியை செலவிடுவார்கள் என சிஏஐடி ஆய்வு தெரிவிக்கிறது. கடந்த ஆண்டின் இதே கல்யாண சீசனில் ரூ.3.75 லட்சம் கோடி செலவில் 32 லட்சம் திருமணங்கள் நடைபெற்றதாக புள்ளிவிவரம் கூறுகிறது.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
முக்கிய செய்திகள்
தமிழகம்
4 mins ago
சினிமா
8 mins ago
தமிழகம்
23 mins ago
இந்தியா
37 mins ago
வெற்றிக் கொடி
1 hour ago
இந்தியா
1 hour ago
வேலை வாய்ப்பு
1 hour ago
தமிழகம்
1 hour ago
இந்தியா
2 hours ago
தமிழகம்
1 hour ago
இந்தியா
2 hours ago
இந்தியா
2 hours ago