இந்தியாவில் இயற்கை சார்ந்த படைப்புகளை ஆங்கிலத்தில் எழுதியவர்களின் பட்டியல் மிக நீளம். அதில் தென்னிந்தியக் காட்டுயிர்கள், அவற்றின் இயற்கை வரலாறு, காட்டுயிர்ப் பாதுகாப்பு ஆகியவை குறித்து ஆங்கிலத்தில் எழுதியவர்கள் பலர். நமது பகுதிகளில் தென்படும், நமக்குத் தெரிந்த, பார்த்துப் பழகிய உயிரினங்கள், தாவரங்கள், நில அமைப்புகள், இடங்கள் ஆகியவற்றைப் பற்றிப் படிக்கும்போது நம்மால் அவற்றோடு எளிதில் உணர்வுப்பூர்வமாகத் தொடர்பு ஏற்படுத்திக்கொள்ள முடிகிறது.
பசுமைப் படைப்புகளை இரண்டு வகையாகப் பிரிக்கலாம். முதலாவது, இயற்கை குறித்து உள்ளுணர்வுடன் எழுதப்பட்ட படைப்புகள். எடுத்துக்காட்டாக ஒரு நிலவமைப்பையோ, மரத்தையோ, பறவையையோ உணர்வுப்பூர்வமாக வர்ணித்து எழுதுவது, இயற்கையுடன் மனிதக் குலத்திற்கு உள்ள தொடர்பை விளக்கி எழுதுவது, கவிதை புனைவது ஆகியவற்றைச் சொல்லலாம். இம்மாதிரியான படைப்புகளில் தத்துவார்த்தமான சிந்தனைகளும் புனைவுகளும் வர்ணிப்புகளும் மேலோங்கி இருக்கும். இருபதாம் நூற்றாண்டுக்கு முன் வாழ்ந்த ஹென்றி டேவிட் தாரோ, ரால்ப் வால்டோ எமர்சன் போன்றோர் இது போன்ற படைப்புகளின் முன்னோடிகள்.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
முக்கிய செய்திகள்
தமிழகம்
15 mins ago
தமிழகம்
26 mins ago
இந்தியா
20 mins ago
தமிழகம்
37 mins ago
வாழ்வியல்
28 mins ago
இந்தியா
42 mins ago
தமிழகம்
1 hour ago
சினிமா
59 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
க்ரைம்
1 hour ago
க்ரைம்
1 hour ago