குடியரசுத் தலைவர் தேர்தல் டைரி 1967: 17 பேர் போட்டியிட்ட குடியரசுத் தலைவர் தேர்தல்!

By டி. கார்த்திக்

இந்தியாவில் 1967ஆம் ஆண்டு நடைபெற்ற குடியரசுத் தேர்தல், அதற்கு முன்பு நடைபெற்ற தேர்தல்களைவிட வித்தியாசமான தேர்தல் என்றே சொல்லலாம். 1952, 1957, 1962 என முதல் மூன்று குடியரசுத் தலைவர் தேர்தல்களும் சம்பிரதாயத்துக்கு நடந்ததைப் போலவே நடந்தேறின. ஆளும் காங்கிரஸ் கட்சி நிறுத்திய வேட்பாளர்களை எதிர்த்து எதிர்க்கட்சிகள் வேட்பாளர்களை நிறுத்தவில்லை. ஆனால், 1967இல் நடந்த குடியரசுத் தலைவர் தேர்தலில் 17 பேர் போட்டியிட்டனர். மேலும் எதிர்க்கட்சிகளும் வேட்பாளர்களைக் களமிறக்கின. 1967 குடியரசுத் தலைவர் தேர்தல் நடந்தபோது மேற்கு வங்கம், பஞ்சாப், கேரளம், தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் காங்கிரஸ் கட்சியின் ஆட்சி மாறி எதிர்க்கட்சிகள் ஆட்சிக்கு வந்திருந்தன.

குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை வாக்களிக்கத் தகுதி பெற்ற இருவர் முன்மொழிய, இருவர் வழிமொழிய வேண்டும் என்கிற விதிமுறையும் சேர்க்கப்பட்டது. நான்காவது குடியரசுத் தலைவர் தேர்தலுக்கு முன்பாகவே பிரதமர் ஜவாஹர்லால் நேருவும், இரண்டாவது பிரதமராகப் பதவியேற்ற லால்பகதூர் சாஸ்திரியும் மறைந்துபோயிருந்தார்கள். அப்போது பிரதமராக இந்திரா காந்தி இருந்தார். நான்காவது குடியரசுத் தலைவர் தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்பில் குடியரசுத் துணைத் தலைவரான ஜாகீர் உசேன் நிறுத்தப்பட்டார். ஜாகீர் உசேனை எதிர்த்து எதிர்க்கட்சிகளின் சார்பில் உச்ச நீதிமன்ற ஓய்வுபெற்ற தலைமை நீதிபதி கோகா சுப்பா ராவ் களமிறங்கினார்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

6 mins ago

விளையாட்டு

12 mins ago

சினிமா

18 mins ago

தமிழகம்

39 mins ago

இந்தியா

24 mins ago

சினிமா

48 mins ago

தமிழகம்

49 mins ago

தமிழகம்

1 min ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

10 mins ago

தமிழகம்

1 hour ago

மேலும்