குடியரசுத் தலைவர் தேர்தல் டைரி 1962: தமிழரைத் தேடிவந்த குடியரசுத் தலைவர் பதவி!

By டி.கார்த்திக்

நாட்டின் மூன்றாவது குடியரசுத் தலைவர் தேர்தல் 1962ஆம் ஆண்டு நடைபெற்றது. 1952, 1957 ஆண்டுகளில் நடைபெற்ற குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிட்டு இரண்டு முறை குடியரசுத் தலைவராகப் பதவிவகித்த டாக்டர் ராஜேந்திர பிரசாத், மூன்றாவது முறை குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிட ஆர்வம் காட்டவில்லை. தன்னுடைய உடல்நிலை பாதிக்கப்பட்டிருப்பதால், மூன்றாவது குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிட விரும்பவில்லை என்று ராஜேந்திர பிரசாத் தேர்தலுக்கு முன்பே தெளிவுபடுத்தியிருந்தார்.

இதனால், ஏற்கெனவே பிரதமர் ஜவாஹர்லால் நேரு விரும்பியது போல குடியரசுத் தலைவர் தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் ஆகும் வாய்ப்பு குடியரசுத் துணைத் தலைவரான சர்வபள்ளி டாக்டர் ராதாகிருஷ்ணனுக்கே இருந்தது. குடியரசுத் தலைவர் தேர்தலுக்கான வேட்பாளராக சுலபமாக ராதாகிருஷ்ணன் தேர்ந்தெடுக்கப்பட்டதைப் போலவே, அவருடைய வெற்றியும் சுலபமாகவே இருந்தது. முதல் இரண்டு குடியரசுத் தலைவர் தேர்தலைப் போலவே, இந்த முறையும் எதிர்க்கட்சிகள் சார்பில் வேட்பாளர்கள் யாரும் நிறுத்தப்படவில்லை. அதற்கு இன்னொரு காரணமும் இருந்தது.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE