கிராமத்து அத்தியாயம் - 12: நெல்லுச்சோறைக் காணாத முத்தாத்தா

By Guest Author

முத்தாத்தா, மகன் கடம்பனுக்குக் கல்யாணம் முடித்து வைத்தாள். அவள் பிறந்ததிலிருந்து நெல்லுச் சோறே சாப்பிட்டதில்லை. மகனும் கேப்பை, தினை, சாமை என்றுதான் சாப்பிட்டிருக்கிறான். அந்தக் காலத்தில் நெல்லுச் சோறு என்பது மிகவும் அரிதாகக் கண்ணுக்கும் கைக்கும் காணாததாயிருந்தது. முத்தாத்தா மகனின் கல்யாணத்தில் அவசரமாக இங்கும், அங்குமாய் அலைந்தாலும் நெல்லுச் சோறு சாப்பிட வேண்டும் என்கிற எண்ணம் அவள் நெஞ்சில் மழைக் காலத்துத் தட்டான்பூச்சியாக சிறகு விரித்து அலைந்தது.

ஒருவழியாக புதுமணத் தம்பதியை மறுவீட்டுக்கு அனுப்பிவிட்டு வீட்டுக்கு அவசரமாக ஓடிவந்தாள். ஆனால், பானையில் சோறு இல்லை. அப்போ தெல்லாம் மண் பானையில்தான் சோறு வைப்பார்கள். வீட்டுக்கு வந்திருந்த விருந்தாளிகள் இருக்கிற சோற்றையெல்லாம் எடுத்துப்போட்டுச் சாப்பிட்டுக் கொண்டிருந்தார்கள். இவளுக்கு இருந்த ஆசையில் அவர்கள் தட்டைக் கூடப் பிடுங்கிச் சாப்பிடுவோமா என்று இருந்தது. ஆனால், ‘நாம் கல்யாண வீட்டுக்காரி, அப்படிச் சாப்பிட்டால் அது அசிங்கமாகிவிடும். இனி மருமகள் இங்கே தனிக்குடித்தனம் வைப்பாள். அப்ப எப்படியும் நெல்லுச் சோறு காய்ச்சத்தான செய்வாள். அப்ப சாப்பிட்டுக்கிடுவோம்’ என்று பேசாமல் இருந்துவிட்டாள்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

9 mins ago

க்ரைம்

13 mins ago

சுற்றுச்சூழல்

49 mins ago

க்ரைம்

53 mins ago

இந்தியா

51 mins ago

சினிமா

1 hour ago

கருத்துப் பேழை

1 hour ago

சுற்றுலா

2 hours ago

சினிமா

2 hours ago

இந்தியா

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

மேலும்