எது அழகு? மனிதனின் முகமா, உடையா, நடையா, நிறமா, உடல்வாகா, சொல்லா, செயலா, சிந்தனையா? இதற்குப் பலரும் அவரவர் பார்வைக்கு ஏற்ப பதில் கூறினாலும் அடிப்படையில் எது அழகாகப் பார்க்கப்படுகிறது? முகமும் உடலும்தானே. இயற்கை நமக்கு அளித்த உடலையும் முகத்தையும் எத்தனை பேர் அப்படியே ஏற்றுக்கொண்டிருக்கிறோம்? ஒப்பனைதான் நமக்கு அழகு தரும் என்கிற எண்ணம் அனைவர் மனத்திலும் பதிந்துவிட்டது. தொலைக்காட்சியில் வரும் விளம்பரங்கள், படங்கள்கூட அப்படிப் பதியவைக்கின்றன.
ஒரு பெண்ணோ, ஆணோ சிவப்பாக இருந்தால்தான் அழகு; அப்போதுதான் அவர்கள் தன்னம்பிக்கையோடு இருப்பார்கள் எனக் காட்டப்படுகிறது. முகப்பருக்கள் இருக்கிற பெண் தாழ்வு மனப்பான்மை உடையவளாகச் சித்தரிக்கப்படுகிறாள். பற்களில்கூட வரிசையாக இல்லாவிட்டாலும் வெள்ளையாக இருப்பதுதான் அழகு எனக் கூறப்படுகிறது. மஞ்சள் நிறம் கறையாகத்தான் பார்க்கப்படுகிறது. உண்மையில் பற்கள் முழு வெள்ளையில் இருப்பது இயல்பு அல்லதானே. கால்களில், கைகளில் கருமையோ முடியோ இருந்தால் அழகல்ல என்றே பார்க்கப்படுகிறது. அழகு நிலையங்களுக்குச் செல்லாத பெண்கள்கூட வீட்டிலேயே கடலை மாவு, பயத்த மாவு, தயிர், தக்காளி போன்றவற்றை வைத்து முகத்தைப் பொலிவுமிக்கதாக மாற்ற முயல்கிறார்கள்.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
முக்கிய செய்திகள்
விளையாட்டு
1 hour ago
க்ரைம்
1 hour ago
உலகம்
2 hours ago
விளையாட்டு
3 hours ago
வேலை வாய்ப்பு
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
விளையாட்டு
4 hours ago
கல்வி
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
வாழ்வியல்
5 hours ago