கிராமத்து அத்தியாயம் - 9: பத்து ரூபாய் நோட்டு

By செய்திப்பிரிவு

உண்ணாமலைக்கு எப்போதும் ஊர் பெண்கள் எழுந்து வாசல் தெளிக்கும் முன் தான் எழுந்து வாசல் தெளித்துவிட வேண்டும். அப்போதுதான் அவள் மனசு நிம்மதியாக இருக்கும். அன்றும் அப்படித்தான் கூரையில் அடைந்திருந்த கோழிகள் தலையைத் தொங்கப்போட்டவாறு பொய்த்தூக்கம் தூங்கிக்கொண்டிருக்க இவள் எழுந்து வாசலைப் பெருக்கினாள். அப்போது நடுவாசலில் பத்து ரூபாய் கிடந்தது. பத்து ரூபாய் என்பது அந்தக் காலத்தில் மதிப்பு மிக்க பணம். புண்ணீஸ்வரன் நாப்பது ரூபாய்க்கு ஒரு சோடி காளைகளை சங்கரன்கோவில் சந்தையில் பிடித்துவந்துவிட்டார் என்று கேள்விப்பட்டு ஊரே ஆச்சரியத்தில் மூழ்கிப்போனதோடு அன்று ஆணும் பெண்ணும் காட்டு வேலைக்குக்கூடப் போகாமல் இவர்களின் வாசலில் வந்து கூட்டம்போட்டு வேடிக்கை பார்த்தது. அப்படிப்பட்ட காலத்தில் பத்து ரூபாய் காணாமல் போனால் யாராவது விடுவார்களா?

உண்ணாமலை அந்தப் பத்து ரூபாயை ஆசையோடு மடியில் எடுத்துவைத்துக் கொண்டாள். விடியல் கூடுமுன்னே, “அய்யய்யோ, அய்யய்யோ... என்னை இப்படிப் போட்டு அடிக்கானே. இதைக் கேப்பாரில்லையா” என்று கூப்பாடு போட்டுக்கொண்டே பவுனு தெருவுக்கு ஓடி வர அவள் புருசன் கருசய்யா, “விதைப்புக்காக என் அண்ணன் வீட்டுல போயி பத்து, இருபது ரூபா வாங்கி வான்னு இவளை அனுப்பிவிட்டேன்” என்று சொல்ல, ஊர்ப் பெரியவரான பொன்னாயிரத்துக்குக் கோபம் பொத்துக்கொண்டு வந்தது. “ஏன் அந்த ரூவாய நீ போயி கேக்க வேண்டியதுதானே. உன் வீட்டுப் பொம்பளைய எதுக்குத் தூது அனுப்பினே?” என்றார்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

1 hour ago

சினிமா

3 hours ago

விளையாட்டு

4 hours ago

வணிகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

விளையாட்டு

5 hours ago

க்ரைம்

5 hours ago

சுற்றுச்சூழல்

6 hours ago

க்ரைம்

6 hours ago

இந்தியா

6 hours ago

சினிமா

7 hours ago

கருத்துப் பேழை

7 hours ago

மேலும்