தன்னை யாராவது சாந்தி என்று அழைத்தால், ‘மீனவர் சாந்தின்னு சொல்லுங்க’ என்று பெருமிதத்தோடு திருத்துகிறார் மீனவர் சாந்தி. தொழில்சார்ந்த பெரும்பாலான விளிச்சொற்களுக்குப் பெண் பால் சாத்தியமில்லை அல்லது தேவையில்லை என்று பலர் நம்புவதைப் போலவே மீனவர் என்பது ஆண்களை மட்டுமே குறிக்கும் என்று நம்பப்படுகிறது. ஆனால், மீனவர் என்பது பெண்களையும் உள்ளடக்கியது என்று சொல்லும் மீனவர் சாந்தி, மீனவத் தொழிலில் ஈடுபடும் பெண்களின் உரிமைகளுக்காகத் தொடர்ந்து குரல்கொடுத்துவருகிறார். இந்திய மீனவ மகளிர் தொழிற்சங்கத்தின் பொதுச் செயலாளரான இவரை சென்னை வண்ணாரப்பேட்டையில் உள்ள நாகூரான் தோட்டத்தில் சந்தித்தோம். நம்மோடு பேசியபடியே சாலையைக் கடந்து காசிமேடு அண்ணாநகரில் படகுகள் நிறுத்திவைக்கப்பட்ட இடத்துக்குச் சென்றார். அப்போது எதிர்ப்பட்ட பெண்கள் எல்லாம் ஏதோவொரு கோரிக்கையோடும் கேள்வியோடும் சாந்தியை அணுக, அனைவருக்கும் பதில் இருந்தது அவரிடம்.
உலக மீனவர் தினத்தை முன்னிட்டு அமைப்பு சாரா தொழிலாளர்கள் கூட்டமைப் போடு இணைந்து 100 மீனவப் பெண்களுக்கு நலத்திட்ட உதவி வழங்கியதைப் பற்றிச் சொன்னவர், சுனாமியால் வீடிழந்த மீனவர்களுக்குக் குடியிருப்பு வேண்டும் என்கிற கோரிக்கையை வலியுறுத்திக் கடலில் இறங்கிப் போராடியதை நினைவுகூர்ந்தார். கரோனா காலமும் தன் மக்களுக்குக் கொடுந்துயராக அமைந்தது என்று சொல்லும் சாந்தி, ஊரடங்கு நாள்களில் மீன் பிடிக்கச் செல்லவும் முடியாமல் கையில் பணமும் இல்லாமல் தவித்ததை வேதனையோடு குறிப்பிடுகிறார். “அப்போல்லாம் கருவாடுதான் கை கொடுத்துச்சு. அதுவும் எத்தனை நாளைக்குத் தாங்கும்? யார்யார்கிட்டயோ கையேந்தி எங்க மக்களுக்குக் கூடுமானவரைக்கும் நிவாரண உதவியை வழங்கினோம்” என்கிறார்.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
முக்கிய செய்திகள்
இந்தியா
27 mins ago
இந்தியா
33 mins ago
இந்தியா
38 mins ago
கருத்துப் பேழை
2 hours ago
இந்தியா
46 mins ago
கருத்துப் பேழை
2 hours ago
இந்தியா
52 mins ago
ஆன்மிகம்
1 hour ago
ஜோதிடம்
2 hours ago
ஜோதிடம்
3 hours ago
விளையாட்டு
7 hours ago
சினிமா
9 hours ago