நம் பெண்களுக்கு எதற்கெடுத்தாலும் தயக்கமும் அச்சமும் வந்துவிடும். அதுவும் தங்கள் உடல்நலன் சார்ந்தது என்றால் அதற்கு மூன்றாம்பட்சமாகக்கூட முக்கியத்துவம் தருவதில்லை. இந்தச் சமூகம் உருவாக்கிவைத்திருக்கும் கட்டமைப்புகளில் இருந்து மீள முடியாமல் ‘தியாக’ வாழ்க்கை வாழ்வதையே லட்சியமாகக் கொண்டிருக்கிறார்கள். மார்பகப் புற்றுநோயால் இறக்கும் பெண்களின் எண்ணிக்கை அதிகரித்துவருவதையும் இதற்குச் சான்றாகக் கொள்ளலாம்.
1990களில் உலக அளவில் நான்காம் இடத்தில் இருந்த மார்பகப் புற்றுநோய் இன்று முதலிடத்தைத் தொட்டுவிட்டது. 2020 கணக்கெடுப்பின்படி இந்தியாவில் ஒரு லட்சத்து 78 ஆயிரம் புற்றுநோயாளிகளில் 90 ஆயிரம் பெண்கள் மார்பகப் புற்றுநோய் தொடர்பான கோளாறுகளால் மரணமடைந்துள்ளனர். மருத்துவ வசதி பெருகிவிட்ட காலத்திலும் இவ்வளவு அதிக எண்ணிக்கையில் பெண்கள் இறப்பது கொடுமை. பெண்களிடம் இருக்கும் அறியாமையும் தங்கள் உடல் நலன் சார்ந்த அக்கறையின்மையும்தான் இதற்கு முக்கியக் காரணங்கள். கருப்பை வாய், மார்பகம் போன்ற அந்தரங்க உறுப்புகளில் புற்றுநோய் ஏற்படுவதைப் பெரும்பாலான பெண்கள் தங்கள் நடத்தையோடும் கண்ணியத்தோடும் நேரடியாகத் தொடர்புபடுத்திக் கொள்கிறார்கள். அதனாலேயே அவற்றில் ஏதாவது பிரச்சினை ஏற்பட்டால் குடும்ப உறுப்பினர்களிடம்கூடச் சொல்வதில்லை.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
முக்கிய செய்திகள்
தமிழகம்
1 hour ago
ஜோதிடம்
3 hours ago
ஜோதிடம்
3 hours ago
விளையாட்டு
8 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
10 hours ago
விளையாட்டு
11 hours ago
இந்தியா
11 hours ago
விளையாட்டு
12 hours ago
இந்தியா
13 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
14 hours ago