‘பதினாறு வயது லில்லியின் சடலம் புதர்களுக்கு நடுவிலிருந்து கண்டெடுக்கப்பட்டபோது அவள் வயிற்றில் இறந்துபோன மூன்று மாத கரு ஒன்று இருந்தது’, ‘ஆடம்பர வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு ரேணுகா எனும் பதின்ம வயதுப் பெண் தவறான செயல்களில் ஈடுபட்டுக் கைதானாள்’, ‘பருக்களும் வடுக்களும் நிறைந்த தன் முகத்தைப் பார்க்கப் பிடிக்காத கவிதா (17 வயது) மன அழுத்தத்தில் தற்கொலை செய்துகொள்ள முடிவெடுத்தாள்’ - இது போன்ற செய்திகள் நாள்தோறும் வந்துகொண்டே இருக்கின்றன. புத்தியில்லாமல், யோசிக்காமல் இப்படியெல்லாம் நடந்துகொண்டார்களா இவர்கள்? இல்லை, இவர்களுக்குப் புத்தி உண்டு. ஆனால், வேகம் இருக்கும் அளவுக்கு விவேகம் இல்லை. அறிவுபூர்வமாகச் சிந்திக்காமல் உணர்வுகளின் சொல்படி கேட்டதால்தான் இந்த நிலை!
வளர்ப்புமுறை சரியில்லாதபோதும்கூடப் பதின்ம வயதை அடையும் வரை பெரும்பாலும் பெற்றோர் கட்டுப்பாட்டில்தான் பெண் இருக்கிறாள். பதின்ம வயதை அடையும்போதுதான் உடல், உணர்வுரீதியான மாற்றங்கள் தோன்ற ஆரம்பிக்கின்றன. அதைத் தொடர்ந்து அவள் வாழ்க்கையில் ஒரு முக்கியமான நிகழ்வான ‘பருவமடைதல்’ நடந்துவிடுகிறது. அது என்னவென்று முழுமையாக உணரும் முன்பே அந்த மாற்றம் நிகழ்ந்துவிடுகிறது. அப்போது அவளுக்குள் பரவசமூட்டும், குழப்பிவிடும், பயமுறுத்தும் சில சிந்தனைகளும் அனுபவங்களும் நிகழ்கின்றன. இனி அவள் பெண்; சிறுமி அல்ல. இப்போது அவளுடைய இனப்பெருக்க உறுப்புகள் முழுமையாக வளர்ச்சி பெற்றுவிட்டன. குழந்தை பெற்றுக்கொள்ளும் தகுதியை அவள் அடைந்துவிடுகிறாள். இத்துடன் பாலுணர்வும் சுறுசுறுப்பாகிறது. அவளுக்குள் ஓர் அந்தரங்கம் உருவாகிறது. அதில் தோன்றும் எண்ணங்களை ரகசியமாக வைத்துக் கொள்வாள் அல்லது நெருங்கிய தோழியிடம் பகிர்ந்துகொள்வாள். அவற்றைப் பெற்றோரிடம் சொல்ல முடியாது.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
முக்கிய செய்திகள்
சினிமா
3 hours ago
இந்தியா
22 mins ago
இந்தியா
29 mins ago
இந்தியா
35 mins ago
இந்தியா
49 mins ago
சினிமா
3 hours ago
இந்தியா
57 mins ago
கருத்துப் பேழை
3 hours ago
தமிழகம்
42 mins ago
ஜோதிடம்
4 hours ago
ஜோதிடம்
4 hours ago
விளையாட்டு
8 hours ago